Posts

Showing posts from 2009

2010ஏ வருக!

இந்த ஆண்டும் வாழ்வை வளமையாக்கும் இன்னொரு ஆண்டாக அமையட்டும். நல்ல நண்பர்கள் நல்ல குடும்பம் நல்ல வாசிப்பு நல்ல படைப்பு என எல்லாமே நம் பதிவர்கள் அனைவருக்கும் தொடரட்டும்.. “The woods are lovely, dark and deep. But I have promises to keep, and miles to go before I sleep.” - Robert Frost. 2 0 1 0 ஏ வருக..! உனக்கும் நிறைய வேலை இருக்கிறது!

நம்புங்க டீச்சர்!

அந்தத்தனியார் பள்ளியில் போய் 9ம் வகுப்பில் சேர்கிறார்கள் இரண்டு சிறுமிகள். முதல் நாள் ! முதல் வகுப்பு! ஆங்கில ஆசிரியை வருகிறார்.. அனேகமாக எல்லோரும் அந்தப்பள்ளியிலேயே 8ம் வகுப்பு படித்துவிட்டு 9ம் வகுப்புக்கு வரும் மாணவிகள். புதிதாகச்சேர்ந்த சொற்ப மாணவிகளை எழுந்து அறிமுகப்படுத்திக்கொள்ளச்சொல்கிறார் ஆசிரியை ! அதில் இந்த இருவரைத்தவிர மீதமுள்ளவர்கள் எல்லோரும் முன்னர் படித்ததாக,ஒரு தனியார் பள்ளியின் பெயரைச்சொல்கிறார்கள். இவர்கள் முறை வரும்போது..எழுந்து தங்கள் பெயர் சொல்லிவிட்டு...8ம் வகுப்பு படித்தது...அரசு நடுநிலைப்பள்ளி என்று சொல்கிறார்கள். உடனே அந்த ஆசிரியை எகத்தாளமாக சிரிக்கிறார். கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சுட்டு வந்துட்டு...எந்த நம்பிக்கைல இந்த் ஸ்கூல்ல வந்து சேந்த? எங்க ஸ்டாண்டர்ட் என்னன்னு தெரியுமா? இல்ல டீச்சர்..நாங்க நல்லா படிப்போம்.! ஆமா..கிழிச்சீங்க! எங்க நான் ஒரு கேள்வி கேக்குறேன் பதில் சொல்லுங்க பாப்போம். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்! ஆங்கில உயிரெழுத்துக்கள் எல்லாம் வர்ற மாதிரி ஒரு வார்த்தை சொல்லு! EDUCATION என்று பட்டென்று பதில் வருகிறது.. ஆமா.. இது மட்டும் சொல

கல்விக்கடன்..ஒரு பின்னூட்டமே.. பதிவாக...

கல்விக்கடன் குறித்த...என் முந்தைய பதிவுகளைப்படித்துவிட்டு..திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பின்னூட்டமாக எழுதியிருந்த கருத்துக்களே இந்தப் பதிவாகிறது.....! ஒரு முன்னாள் வங்கியாளராக தனது கருத்துக்களை மிகச்சிறப்பாகச் சொல்லியுள்ளார். திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ! இடையிடையே எனது விளக்கம் மட்டும்.... ஒரு முன்னாள் வங்கியாளனாக இந்த மூன்று பதிவுகளையும் ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்தேன். முதலில், இந்த மூன்றாம் பகுதியில் இருக்கும் சில விஷயங்களைப் பற்றி.... என்ன வரையறைக்கு உட்பட்டு , கடன் கொடுக்கலாம் என்பதை யாரும் சொல்லவே இல்லை என்று சொல்லியிருப்பது சரியல்ல. வரையறைகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால், அன்று நிதியமைச்சராக இருந்த பானா சீனா என்ன செய்தார்? கல்விக் கடன் கொடுக்க மறுக்கிறார்களா, எனக்கு ஒரு போன், தபால் கார்ட் போடுங்கள், தலையைச் சீவுகிறேன் என்ற மாதிரி மிரட்டல்கள்! கொஞ்ச நாட்களில், அதுவும் அலுத்து விட்டது. இதைத்தான் வாய்மொழி என்று நாசூக்காகச்சொன்னேன்...! :) நீங்கள் போட்டு உடைத்துவிட்டீர்கள். கல்விக் கடன் என்பது ஒரு அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகத் தான் ஆரம்பித்தது! அடுத்ததாக, நம்முடைய

கல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள் - பாகம் 3

கல்விக்கடன் ஏன் ?...கல்வி என்ன ஆச்சுன்னு முதல்ல இங்கயும் ...அடுத்து இங்கயும் இருக்கு.. இப்ப வங்கிகள் பக்கம் வருவோம். ப.சிதம்பரம் நிதி அமைச்சரா இருந்தபோது, கல்விக்கடனைப்பற்றி ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவந்து, எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், அதைக் கொடுக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தாரு! ஆனா...என்ன ஒரு பெரிய காமெடின்னா..எந்த ஒரு வங்கிக்கும் , இன்னின்ன வரையறைகளில் கல்விக்கடன் குடுக்கலாம்னு அரசாங்கம் கடைசிவரைக்கும் சொல்லவே இல்லை! எல்லாம் வாய்மொழி உத்தரவுதான்..! அதுனால, அந்தந்த வங்கி மேனேஜர்கள் தலையில் பொறுப்பு விழுந்துச்சு! அவுங்க நினைச்சா கொடுக்கலாம். இல்லைன்னா இல்லை! அதிலயும் அடுத்த ரெண்டு வருஷங்களில் ரிட்டையராகப்போற எந்த மேனேஜரும் கல்விக்கடன்னாலே காத தூரம் ஓடினாங்க! ஏன்னா, அது அவுங்க ரிட்டையர்மெண்ட் சமயத்தில் வராக்கடன் லிஸ்டில் வந்து நின்னுரும். அதையும் மீறி குடுத்தா, நம்ம பையனோட ஏதாவது ஒரு பேப்பரில் தப்பு இருந்திருக்கும். அதை வச்சு அந்த மேனேஜரைக் குடையுவாங்க ! இதுக்கு பயந்துக்கிட்டே, கூடை வச்சிருக்கவுங்களுக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் தர்றதில்லைங்கிறமாதிரி என்ன உங்க அப்பா உயரமா இருக

கல்விக்கடன் - கோபிநாத்- சில எண்ணங்கள் 2

கல்விக்கடன் குடுக்குறதே ஒருவிதமான கடனாளியாக்கும் தன்மைன்னு முதல் பகுதில சொல்லியிருந்தேன். உண்மையிலேயே ஒரு மாணவன் நல்லா படிக்கிறான். அவன் குடும்பமே அவன் படிப்பால் சிறப்படையும்னு தெரியும்போது, அரசாங்கம் அவனுக்கு , இலவசக்கல்வியைத்தான் கொடுக்கணும். கடனை இல்லை. இப்படிக்கொடுக்குறதால , பெரிசா பயனடையப்போறது தனியார் கல்லூரிகள்தான்..! அல்லது.. அவனுக்கு கடன் கொடுக்கும்போதே, பீஸை குறைச்சுக்கச்சொல்லி அந்தக் கல்லூரியை வலியுறுத்தலாம். ஆனா இது ரெண்டுமே பண்ணாம, தனக்குன்னு ஒரு அளவுகோல் வச்சிக்கிட்டு கடன் கொடுத்து , மறுபடியும் மக்களை தள்ளுபடி எதிர்பாக்குறவுங்களா ஆக்குது அரசாங்கம்! சரி...யாராவது ஒருத்தர்தான் இதுக்கு காரணம்னா.. அதுவும் சொல்ல முடியலை! இப்ப முதல்ல...கல்வியை எடுத்துக்குவோம். இந்தியாவில்...அதுவும் தமிழ்நாட்டில்... தனியார் கல்லூரிகள் அதிகமாப்போச்சு! அரசுக்கல்லூரிகள் கொஞ்சமாத்தான் இருக்கு! அதுவும் பாடாவதியா இருக்கு! நான் பள்ளிப்படிப்பை முடிக்கும்போது, எனக்கு அரசு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைக்கலை...தனியாருக்கு போகலாம்னா, எங்க ஏரியாவில் ஒரே ஒரு தனியார் பொறியியல் கல்லூரிதான்.. அது

கல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள்

இரு வாரங்களுக்கு முன்பு நீயா? நானா? வில், கோபிநாத் கையாண்ட விஷயம் கல்விக்கடன். மாணவர்கள் தரப்பு - எவ்வளவுதான் டாக்குமெண்ட் காட்டினாலும் கடன் தரக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா தரமாட்டேங்குறாங்கன்னு பேங்க் மேனேஜர்களை குற்றம் சாட்டினாங்க! வங்கிகள் தரப்பில் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமா பதில் சொல்லி , தங்கள் இயலாமையை தன்னை அறியாமல் வெளிச்சம் போட்டுக்கிட்டாங்க! கடைசியா...ஒரு பொண்ணு தனக்கு கடன் கிடைக்காம தான் கஷ்டப்பட்டதை சொல்ல, ஒரு மேனேஜர் நான் தரேன் அந்தப்பொண்ணுக்கு லோன் - ன்னு சொன்னவுடனே எல்லோரும் உணர்ச்சிவசப்ப்டுறமாதிரி, அந்தப்பெண்ணின் கண்ணீரில் உண்மை இருந்தது. கோபியும் அந்த அளவுக்கு அதைப் பெருமையா கொண்டுபோனார். - அவர் சொன்னது போல் - எதையுமே திட்டமிடாம, ஆனா இயல்பெல்லாம் மீறி ரொம்ப அற்புதமா அந்த நிகழ்வு இருந்தது. அதில் அந்த மேனேஜர்க்கிட்டேருந்து ஒரு வார்த்தையை கோபி வாங்கினார். அது ' ஹ்யூமன் கன்சிடரேஷன்' ! அந்த ' மனிதனை கருத்தில் எடுத்துக்குறது' ங்கிற விஷயத்தில்தான் எல்லா பேங்கும் தோத்துப்போயிடுது.. அதே சமயம் மாணவர்களும் , எல்லாருக்கும் கல்விக்கடன் தந்தே ஆகணும்கிறமாதிரி இ

சுகம் எங்கே? காண்டேகரின் யுக்திகள்!

சுகம் எங்கே பற்றி இங்கே படித்துவிட்டு தொடர்ந்தால் நலம்... கதை ஒரு மூன்றாம் மனிதனின் கோணத்தில் சொல்லப்படாமல், கதாபாத்திரங்களின் வாயிலாக சொல்லப்பட்டிருக்கிறது. அதுவும் ஒரே கதாபாத்திரம் சொல்லாமல் எல்லோரும் சொல்லுமாறு, குழப்பமின்றி அமைக்கப்பட்டிருக்கிறது. முதலில் முத்தண்ணா கதையை ஆரம்பித்து, ஆனந்தன் தொடர்ந்து, உஷா தன்னிலை கூறி என கதை மாந்தர்கள் மூலமாக அவர்கள் நிலையும் எடுத்துரைக்கப்பட்டு, கதையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படுகிறது. கடைசிவரை இந்த யுக்தியில் சுவாரஸ்யம் குறையாமல் கையாண்டிருக்கிறார் காண்டேகர். பல அத்தியாயங்களில்...முதல் கதாபாத்திரம் விட்ட வார்த்தையிலிருந்து , அடுத்த கதாபாத்திரம் அதே வார்த்தையில் ஆனால் வேறொரு கோணத்தில் தொடர்கிறார். எடுத்துக்காட்டாக... முத்தண்ணா கூறுகிறார்... ' விசுவாமித்திர முனிவர் அறுபதினாயிரம் வருஷங்கள் தவம் புரிந்தும் அவருக்கு இந்திரப்பட்டம் கிடைக்கவில்லை. ஆனால் முத்தண்ணாவுக்கோ மொத்தம் ஒன்பது வருஷங்களிலேயே..! ஆனந்தன் தொடங்குகிறார். ஒன்பது வருஷங்கள் ! ஒன்பது வருஷங்களாக நான் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கிறேன். இந்த ஒன்பது வருஷங்களில் ஒருமுறையாவது திரும்பிப

'ஆனந்த' மகிழ்ச்சி!

Image
இன்று ஒரு ஆனந்தம்..! என் கவிதை ஆனந்தவிகடன் இதழின் 44ம் பக்கத்தில் வந்திருக்கிறது. இதில் இன்னுமொரு மகிழ்ச்சி என்னவென்றால்.. அன்புநிறை நர்சிம் அண்ணனின் கவிதை உள்ள பக்கத்திலேயே என் கவிதையும் வந்திருப்பதுதான். அன்புகாட்டும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இந்தக்கவிதைப்பக்கம் சமர்ப்பணம். நன்றி நண்பர்களே !

சுகம் எங்கே?

Image
கதைசொல்லிகளால்தான் கதைகள் எப்பவும் மெருகடையும் என்பதில் எனக்கு அபார நம்பிக்கையுண்டு. சொல்லும் விதத்தில் உள்ள வேறுபாட்டால், ஒரு நல்ல கதையை சுவாரஸ்யமாகவும் ஆக்கலாம். அப்படியே சொதப்பவும் செய்யலாம். இந்தக்காலகட்டத்தில் பல யுக்திகள் கையாளப்படுகின்றன. ஆனால், 1940 களில் மராட்டிய எழுத்தாளர் வி.ஸ. காண்டேகர் (1898 - 1976) இந்த அற்புதத்தை சுலபமாகச்செய்துவிட்டுப்போயிருக்கிறார். ஞானாலயா நூலகத்தின் (இந்த நூலகத்தைப்பற்றி இன்னொரு சமயம் விரிவாக எழுதுகிறேன்) நிறுவனர் திரு.பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், 'சினிமால வேலை பாக்குறேங்கிறீங்க! இதைப் படிச்சுப்பாருங்க! ' என்று கொடுத்ததுதான் வி.ஸ.காண்டேகரின் 'சுகம் எங்கே?' என்ற நாவல். இதை தமிழில் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்த்துள்ளார். இவரைப்பற்றி மேலதிக தகவல்களை முவளர் என்ற பதிவர் குறிஞ்சி எனும் வலைப்பூவில் அழகாக எழுதியுள்ளார். சுட்டி இதோ! சுகம் எங்கே நாவலின் பாத்திரங்கள் ஆனந்தன், முத்தண்ணா, உஷா, மாணிக்கம்(பெண்), சஞ்சலா,தனஞ்சயன் ஆகியோரைச்சுற்றி பின்னப்பட்டது. ஆனந்தன் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட் , வக்கீலுக்குப்படித்திருக்கிறான். அவன் அண்ணன் முத்தண்ணா..அவர் சம

என்ன செய்யலாம்?

லவ்டேல் மேடியின் திருமணம், ஈரோட்டில்.. கண்டிப்பாகப்போய்விடவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். திருமண கொண்டாட்டங்களை மீறி அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. ஆனால் இப்போது செய்ய ஆரம்பித்துள்ள வேலையின் திடீர் அழைப்பால் , போக இயலவில்லை. நிறைய பதிவர்கள் வருவதாக வால்பையன் கூறியிருந்தார். நண்பர்களைச் சந்திப்பதில் வெறி பிடித்தலையும் எனக்கு இது மிகப்பெரிய வாய்ப்பை நழுவவிட்டதில் பெருத்த ஏமாற்றம்தான். பதிவர்களின் நட்பு மிகவும் அன்பும், ஆச்சர்யமும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும், உதவும் எண்ணமும் நிறைந்ததாக உணர்கிறேன். பள்ளி, கல்லூரிக்கால நண்பர்கள்கூட எங்கெங்கிருக்கிறார்கள் என கண்டுபிடித்து நட்பைத்தொடர்வது மிகவும் இயலாத சூழலாக உள்ளது. ஆனால் பதிவர் நட்பு, உலகம் முழுக்க வியாபித்து, எல்லாத்துறைகளிலும் கோலோச்சி, நம்மை வேறொரு தளத்துக்குக் கொண்டுசெல்வதை நான் பலமுறை அனுபவித்துள்ளேன். இத்தகைய சந்திப்புகளை, நம் நட்பை பலப்படுத்தும் நிகழ்வாக மட்டுமின்றி, நமக்குள் இருக்கும் சமூக அக்கறைக்கு செயல்வடிவம் கொடுக்க ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்தவேண்டும் என்று விரும்புகிறேன். நாம் பல்வேறு செயல்பாடுகளால் சமூக வளர்ச்சியை ஏ

வாழ்த்துக்கள் மேடி

Image
நமது அன்புப்பதிவர், நண்பர் லவ்டேல் மேடி க்கு இன்று திருமணம்...! அவர் வாழ்வில் எல்லா வளமும் பெற்று அன்பே அரசாய் அறிவே அமைச்சாய் அறமே அரணாய் இல்வாழ்க்கை அமைய எல்லோரும் வாழ்த்துவோம்....!

மகிழ்துக்கம்...!

Image
மறுபடியும் யூத்புல் விகடனில்...கவிதை! இன்னிக்கு யூத்ஃபுல் விகடனில் என் கவிதை வந்திருக்கு! ஆச்சர்யமா இருக்கு! http://youthful.vikatan.com/youth/Nyouth/sureka05112009.asp கவிதை இதுதான்..! காணாமல் போன தோழியைத் தேடும் முயற்சியில் காவலர்கள் வந்து பார்க்கச்சொன்ன, விபத்தில் இறந்த பெண்ணை அடையாளம் காட்டும் அந்த விநாடியில் அவளில்லை என்று சொல்லும்வரை பரிதவித்த மனம் அகமகிழ்ந்தாலும் அடுத்து யாரோ ஒருவனுக்கு அந்தப் பெண்ணை ’அவள்தான்!’ என்று கூறவேண்டியதன் அவலம் கொஞ்சம் அதிகமாகவே கனத்தது. நன்றி: யூத்ஃபுல் விகடன்.காம்

செய்யாச் சிந்தனை!

Image
எதை எழுத நினைத்தாலும் ஒன்றும் எழுத முடியாமல் நண்பர்கள் சிந்தனையை வேடிக்கை பார்த்துவிட்டு கணிணியை மூடும்போதுதான் மூளைக்குள் முளைத்திருக்கும் வேர்களுக்கு நான் ஊற்ற நினைத்த நல்நீர் நாக்கில் ஊறியும் வெளிப்படாமல் விரல்களின் வழியும் இலைவிடாமல் சோம்பேறித்தன வெந்நீராய் வேர்களைப் பொசுக்கிவிட்ட செய்தியொன்று கைதவறிய பூங்கொத்தாய் என்னை ஏளனப்படுத்திச் சிரிக்கிறது! பொசுக்கிய வேர்களின் ஏதாவதொரு வித்து நண்பரின் மூளைக்குள் முளைவிடும்போது வெந்நீரைக்குளிரவைக்க வெட்டிச் சமாதான பனிப்பாறைகளை கொட்டக்கொட்ட விஞ்ஞானம் மீறி வெந்நீர் கொதித்து வெடித்தெழும் எரிமலையாய் விடியல்கள் கனக்கிறது! ஒன்றுமட்டும் தெரிகிறது சிந்திப்பது சுலபம்! செயல்படுவதே கடினம்!

மகளென்னும் தேவதை!

காணாமல் போன செல்போனை வீடெங்கும் தேடினால் தண்ணீர் அண்டாவில் கிடக்கிறது! பால் காய்ச்ச வைத்திருந்த பாத்திரத்தைக்காணவில்லை என்று அம்மா அலற, அது குப்பைக்கூடைக்குள்ளிலிருந்து எட்டிப்பார்க்கிறது ! தொலைக்காட்சியின் ரிமோட்டின் உடலெங்கும் கட்டுக்கள்! அடுத்த ரிமோட் வீட்டுக்குள் அடியெடுத்து வைக்கிறது! வெளியில் கிளம்பும் எல்லோருக்கும் விளையாட்டு காத்திருக்கிறது! உங்கள்செருப்பைத் தேடுங்கள் பார்ப்போம்.! படுக்கையறையில் இடம்மாறிய பலபொருட்களை கண்டுபிடிப்பதே பாதிநாள் பணியாய் வேலைக்காரி கூறுகிறாள் ! அசந்த நேரங்களில் தண்ணீர்ப் பாத்திரங்கள் தலையில் ஊற்றியதுபோக மீதத்துடன் நிற்கின்றன! கதவுகளின் சாவித்துவாரங்களெங்கும் குச்சிகள் அடைக்கப்பட்டு அவசரத்துக்கு பூட்டமுடியலை என்று அத்தனைபேரும் அலறுகிறோம்.! அம்மா என் புத்தகத்தின் ஆறாம் பக்கத்தை காணலை! அலறுகிறான் அஸ்வின்! அடுக்கிவைத்திருந்த துணிகளெல்லாம் அறையெங்கும் சிதறிக்கிடக்க மனைவியின் புலம்பலால் நிறைகிறது இரவு உணவு! நடமாடும் பகுதியெல்லாம் சோற்றுப்பருக்கை, கஞ்சி என காலெங்கும் பிசுபிசுப்பு! என் மகளென்னும் தேவதை நடமாட ஆரம்பித்துவிட்டாள்! அவள் எச்சில் படாத இடமிருந்தால்

ஒரே சமயத்தில் 22 !

இந்தமாதிரி மேட்டருக்குத்தான் இவன் லாயக்குன்னு ..டேக்கின அன்னத்துக்கு ....! நற...நற...நன்றியுடன்! :) 1 .Grab the book nearest to you, turn on page 18 and find line 4? எடுத்துவிட்டேன்...ஆம்...18ம் பக்கம்..4வது வரி இருக்கிறது...! (எப்புடி?) புத்தகம் : ஒரு தமிழ்ப்பாமரனின் பயணம் - மு.தனராசு "நான் தலையை மட்டும் ஆட்டினேன். நான் சந்தேகப்..." 2. Stretch your left arm out as far as you can & touch air? இல்லை...அதற்குமுன்னரே அது என்னைத்தொட்டுவிட்டது 3.What is the last thing you watched on TV? சுஃபி ஞானிகளைப்பற்றிய டிஸ்கவரி தொகுப்பு 4.Without looking, guess what time it is? இரவு 8 மணி....15 நிமிடங்கள் 20 வினாடிகள் 5. Now look at the clock, what is the actual time? இரவு 8 மணி ....17 நிமிடங்கள் 10 வினாடிகள் 6. With the exception of the computer, what can you hear? தொலைக்காட்சி 7. When did you last step outside? What were you doing? நட்சத்திரங்கள் மொட்டைமாடியில்...! நண்பனிடம் உலாபேசிக்கொண்டே! 8.Before you started this Q&As, what did you look at? அப்துல்லாவின் பதிவு 9. What are you

காகங்களல்ல! மேகங்கள்!

Image
நீங்களா இப்ப்டி ரிப்போர்ட்டில் இத்தனை தவறு செய்கிறீர்கள்? மேலதிகாரியின் மெயிலில்  அனலாய்க் காய்கிறது வேலையிடம்! சாதம் ஏன் இனிக்கிறது? பாயசம் ஊற்றிப்பிசைந்தபின்னே குழம்புக்கிண்ணம் பக்கத்தில் கொக்கரித்துச் சிரிக்கிறது. ஆறுமாதமாய் அடிக்காமல விட்ட பாழாய்ப்போன சரக்குகூட  சகலத்துக்கும் உதவிசெய்யும் சகோதரனாய்த் தோன்றுகிறது! வாகனம் ஓட்டிக்கொண்டே சிந்தித்ததில் வழியெங்கும் வசவுப்போக்குவரத்தின்  வாய்கொள்ளா இரைச்சல்! இருந்தாலும் மாப்பிளை நீ இப்படி எழுதியிருக்கக்கூடாது! சூப்பர்டா என்றவன் கூட சூத்திரம் சொல்லித்தருகிறான் ! இதுக்கு என்ன பதில் எழுதலாம்? அதை எப்படி மறுத்துச்சொல்லலாம்! எண்ணச்சங்கிலிகள் சுற்றிவந்து என்னைக் கொல்லாமல் விடாதுபோல! இத்தனை நாள் காத்திருந்த எல்லா ஹிட்டும் தாண்டிவிட்டேன்! தேடித்தேடித் தின்னும் பின்னூட்டங்கள் கசக்கின்றன. மனம் நோகவேண்டாமென்று மட்டுறுத்தினாலும் பின்னூட்டம் பெருகுகிறது. கூரான வார்த்தைகளால் குறையாமல் விழுகிறது குருதி! அந்தப்பதிவை மட்டும் அனேகம்பேர் படிக்கக்கூடாதே.. அல்ப ஆசை ஒன்று ஆக்கிரமிக்கும் நெஞ்சுக்குள்! சொன்னது சரிதானென்று சொக்காய் கிழிய வாதிடலாம்! சொன்னது முற்றி

டெக்னாலஜி குலோத்துங்கன் - 5

நாடகத்தின் முந்தைய பாகங்கள் 1 , 2 , 3 , 4. ... இளவரசி என்ன யோசனை சொல்லவேண்டும் தந்தையே!? மன்னர்        வாம்மா..இளவரசி! உன் லேப்டாப் சரியாகிவிட்டதா..அந்த அடிமை வந்தானா? இளவரசி வந்தார்..நன்றாக லேப்டாப்பை ரிப்பேர் செய்தார் (மனதுக்குள்)(என் மனத்தைத்தான் கெடுத்துவிட்டுப்போய்விட்டார்) மன்னர் மிக்க மகிழ்ச்சி! இளவரசி அது கிடக்கட்டும்.  என்னவோ யோசனை என்று அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தீர்களே அது என்ன? மகாராணி : அதுவா! உன் தந்தை தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார். இளவரசி என்ன தும்பு? என்ன வால்? ஒன்றும் புரியவில்லையே! மன்ன ர் இவளுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் என்னை ஓட்டுவதில்தான் இன்பம்! அது ஒன்றுமில்லை மகளே! நாட்டில் உணவு உற்பத்தியை பெருக்கலாம் என்று யோசித்தேன். அதனைச்செயல்படுத்த தகுந்த ஆள் இல்லை..அதான்..! இளவரசி நீங்கள் எப்போதுமே இப்படித்தான் அப்பா! கையிலேயே ஆளை வைத்துக்கொண்டு ஊரெங்கும் அலைவீர்கள்! மன்னர் நீ யாரைச்சொல்கிறாய்? உங்கள் அம்மாவையா? அவளுக்கு உணவு உண்ணத்தான் தெரியுமே அன்றி உற்பத்தி பற்றிய யோசனைகள் எதுவும் தெரியாது! இளவரசி அய்யோ !

டெக்னாலஜி குலோத்துங்கன் - 4

டெக்னாலஜி குலோத்துங்கன் - நாடகம் தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கிறது..! இளவரசி ஏன் நிகழக்கூடாதா? யோசித்துப்பாருங்கள் ..ஏன் நீங்கள் வருமானவ்ரி கட்டாமல் இருக்க வேண்டும்.அதற்கு ஏன் என் தந்தையார் இந்த தண்டனை கொடுக்கவேண்டும்? என் லேப்டாப் ஏன் ரிப்பேராகவேண்டும்.? எல்லாம் நம் சந்திப்பு நிமித்தமாகத்தானே? என்னைப் பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடுங்கள்! :( புவன் அப்படியில்லை! இளவரசி அப்படியென்றால் பிடித்திருக்கிறது..சரிதானே! புவன் பிடித்திருக்கிறது...ஆனால் நீங்கள் மன்னரின் மகள் ..நானோ ஒரு குடிமகன்! மன்னருக்குத்தெரிந்தால் என்னை கொன்றுவிடுவார். இளவரசி உங்கள் மொபைல் நம்பர் கொடுங்கள் ! இனிமேல் நாம் நம் காதலை செல்பேசியில் வளர்ப்போம். புவன் எனக்கென்னமோ நெருடலாகத்தான் இருக்கிறது இளவரசி எனக்கெந்த நெருடலும் இல்லை! நீங்கள் எனக்கெனவே பிறந்தவர் என்று உறுதி செய்துவிட்டேன். புவன் நீங்கள் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்துப்பார்த்துவிடுங்கள். ஒரு சாமனியனுக்கு இளவரசிமேல் காதல் வருவது இயல்பு..ஆனால் இளவரசிக்கு சாமானியன் மேல் காதல் வரும்போது பல்வேறு சோதனைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும். இளவரச

டெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 3

காட்சி 5 - அரண்மனை அந்தப்புரம் ( புவன், இளவ்ரசி விண்டோ மகாலெஷ்மி) புவன் : இளவரசி ! இளவரசி! இளவரசி : யாரது? புவன் : நான் தான் புவன்! தங்கள் லேப்டாப் வேலை செய்யவில்லையென்று வரச்சொல்லியிருக்கிறார்கள். இளவரசி : ஓ..நீங்களா வாருங்கள் ! (மனதுக்குள்) ...ஆஹா..என்ன ஒரு கம்பீரம்?. கண்களில்தான் என்ன ஒரு ஒளி..நிச்சயம் இவன் ஒரு பெரிய புத்திசாலியாகத்தான் இருக்கவேண்டும். நான் இணையத்தில் பார்த்த சிறந்த ஆண்களைவிட நன்றாக இருக்கிறானே! புவன் இளவரசி..இளவரசி! இளவரசி (சிந்தனை கலைந்து) ஆ..என்ன? என்ன? புவன் இல்லை..லேப்டாப் எங்கே ..என்ன பிரச்னை என்று கேட்டேன். இளவரசி ஓ....இதோ உள்ளே இருக்கிறது எடுத்துவருகிறேன். வேலைபார்த்துக்கொண்டிருக்கும்போது அப்படியே நின்றுவிட்டது. புவன் சரி..கொண்டுவாருங்கள் ! பார்த்துத்தருகிறேன். (இளவரசி லேப்டாப்பை கொண்டுவருகிறாள். புவன் அதைப்பார்க்கிறான்) இளவரசி : ஆமாம்.. நீங்கள் தண்டனையில் இங்கு வேலை பார்ப்பதாக தந்தையாரும், மந்திரியும் பேசிக்கொண்டிருந்தார்களே..! என்ன குற்றம் செய்தீர்கள்..! புவன் நான் ஒரு குற்றமும் செய்யவில்லை ! தங்கள் தந்தை செய்த குற்றத்

டெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 2

காட்சி 3 அந்தப்புரம் ( மன்னரின் மனைவி லினக்சி, மகள் விண்டோ மகாலெட்சுமி, தோழி ஐபாட் அம்புஜம்) மகாராணி : மகளே விண்டோ மகாலெட்சுமி ! எப்போது பார்த்தாலும் கணிப்பொறி முன்னாலேயே அமர்ந்திருக்கிறாயே..! அப்படி என்னதான் பார்த்துக்கொண்டிருக்கிறாய்! மகள் விண்டோ மகாலெட்சுமி : அம்மா ! நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்று இணையத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறேன். மகாராணி அப்படி எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்!? இளவரசி : அப்போது பல விஷயங்கள் மிகவும் அதிகமாகக்கிடைத்திருக்கின்றன அன்னையே! மகாராணி என்னனென்ன அதிகமாகக்கிடைத்திருக்கின்றன? இளவரசி இப்போது நமது அருங்காட்சியகத்தில் உள்ளனவே மரங்கள் என்பவை! அவை அதிகமாக இருந்திருக்கின்றன. அடுத்து நீர் ! நாம் கூட சென்ற ஆண்டு அண்டை நாட்டிடம் போரிட்டு வென்றோமே! மகாராணி ஆம்..ஆம். ஆனால் அதில் நாம் போரிட்டது ஒரு அண்டா குடிநீருக்காக..அவர்கள் பதுக்கிவைத்திருந்து ஏய்த்துவிட்டார்கள். போரின் முடிவில் ஒரு குடம்தான் கிடைத்தது.அதிலும் அரைக்குடம் தண்ணீர்தான் இருந்தது. இளவரசி ஆம்..அம்ம