Posts

Showing posts with the label பார்வை

தங்கம் வாங்குவதை நிறுத்துங்க!

Image
           மக்கள் எல்லோரும்,  குறிப்பாக இந்தியர்கள்… அதிலும் குறிப்பாக தமிழர்களுக்கு தன்னிடம் அதிகமாகச் சேரும் தொகையை இரண்டு இடங்களில் முதலீடு செய்ய ஆசையாய் இருக்கும். ஒன்று தங்கம். இரண்டாவது வீட்டு மனை..!      அந்த முதல் பொருள்தான் நம்மிடையே மிகவும் அதிகமாகப் புழங்கி, இந்தியப் பொருளாதாரத்தையே ஆட்டுவிக்கிறது என்றால் நம்பத்தான் வேண்டும். இந்திய அரசு தங்கத்துக்கான இறக்குமதி வரியை அதிகப்படுத்தியிருக்கிறது. இதைப் பற்றி எல்லோரும் மிகவும் அதிர்ச்சியடைந்து பேசுகிறார்கள். குறிப்பாக நகைக்கடை முதலாளிகள், ‘அய்யோ! இது மக்களைத் தங்கம் வாங்க விடாமல் செய்யும் முயற்சி! நடுத்தர ஏழை மக்கள் தங்கமில்லாமல் தத்தளிப்பார்கள் என்று குலவையிடுகிறார்கள். ஏன், இறக்குமதி அதிகமாவதற்கு முன் அவர்கள் வாங்கிய நகையை பழைய விலைக்கு நமக்காகக் கொடுப்பார்களா என்று கேட்டுப்பாருங்களேன். அதேபோல், சேதாரத்தின் ஆதாரங்களை அலசினால் இன்னும் கொடுமையாகை இருக்கும். ஆனால், அரசோ, நாம் தங்கம் வாங்காமல் இருக்க வேண்டும் என்றுதான் இவ்வளவு வரி போடுகிறது....

உன்னைக் காணாது நானிங்கு..

Image
      எதை மனதில் வைத்து இந்தப்பாட்டை எழுதினார்களோ தெரியவில்லை. விஸ்வரூபம் தமிழகத்தில் ரிலீஸ் ஆகாதபோது நம் அனைவருக்கும் ஏற்பட்ட உணர்வு அதுதான்.!! “ உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே” ! ” பக்கத்து மாநிலத்துக்குச் சென்று பார்க்கும் அளவுக்கு நமக்கு ஆவலைத்தூண்டியிருந்தது இங்கு இருந்த தடையும், படத்தின் மேலிருந்த நமது எதிர்பார்ப்பும்!      கமலஹாசன் (எனக்கு கமல் சார்) அவர்களின் படங்களும், பாடல்களும் சமீப வருடங்களில் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. தேவர் மகன்  வந்த புதிது! நானும் எனது நண்பர்களும் வேளாங்கண்ணியிலிருந்து தஞ்சாவூருக்கு பேருந்தில் வந்துகொண்டிருந்தோம். அதில்தான் முதலில்   ‘இஞ்சி இடுப்பழகி’ பாடல் கேட்டேன்.  கேட்டவுடன் பச்சக் என்று ஒட்டிக்கொண்டது. அதில் இருந்த எளிமையும், வார்த்தைகளில் இருந்த வாஞ்சையும், இசையராஜாவின் ஆட்சியும் கலந்து எல்லோரையும் விரும்ப வைத்தது. அந்தப்பாடலை பாடிப்பார்த்து, பாடிப்பார்த்து, மெருகேற்றிக்கொள்ள, அதுவே  நண்பர்களிடையே என்னைப் பிரபலமாக்கியது. ...

சாதனை அரசிகள்

Image
வெற்றிக்கதைகள் படிப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும். சாதித்த மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இருந்த இடர்களைப் படிக்கும்போது அந்த உழைப்பின் மேன்மை உரைக்கும் செய்திகள் ஏராளம்! அந்த வகையில் ‘நமது பதிவரும்..பிரபல கவிஞர், எழுத்தாளர் என்று அறியப்படுபவருமான தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதி சாதனை அரசிகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் சொல்லும் சாதனை மனிதர்கள் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள். மொத்தம் பதினேழு பெண்மணிகள். வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரது வெற்றிக்கும் பின்னால் இருந்த ஒரே ஒற்றுமை, -உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை.! மேலும் அவர்கள் ஜப்பானிலோ, ஜமைக்காவிலோ இல்லை.. நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம் நகரத்தில்..நம் மாநிலத்தில்…நம்முடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஒரு உண்மையும், நெருக்கமும் உணரமுடிகிறது. முதலில் ரம்யா தேவி! – இவரை நான் ஒருமுறை அப்துல்லா அண்ணனின் அலுவலகத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் பார்த்திருக்கிறேன். சில நிமிடங்கள் பேசினோம். ஆனால்..இவ்வளவு சிறந்த பெண்மணி...

தெர்மக்கோல் தேவதைகள் - இதுக்கு ஒரு....

Image
   ’தலைவரே! நான் BLOGல் எழுதின சிறுகதைகள் ’உ’ பதிப்பகம் மூலம் தொகுப்பா வருது! அந்த ராஜி, ஜெயா அதெல்லாம்… கதைகளின் தலைப்பையே புத்தகத்தலைப்பா வைக்காம, புதுசா ஒரு தலைப்பு வைக்கணும்..!! ஒரு டைட்டில் பிடிங்க! ‘ இதுதான் அன்பு நண்பர் கேபிள் சங்கர் என்னிடம் போனில் சொன்னது..! சில தலைப்புகளைச் சொல்ல ஆரம்பித்தேன்..! அவர் போக்குவரத்தில் இருக்கும்போது, வண்டியை நிறுத்திவிட்டு கேட்க ஆரம்பித்தார். மெழுகுப் பாறைகள் ம்ஹூம்.. தாழம்பூத் தாரகைகள் ம்ஹூம்.. பாதரசப் பறவைகள் ம்ஹூம் மகரந்தச் சாட்டைகள் ம்ஹூம்.. தீக்குச்சி தேவதைகள் ம்ஹூம்.. தெர்மகோல் தீபங்கள்! ம்…இதுல ஏதோ இருக்கே..! இதுக்கு முன்னாடி என்ன சொன்னீங்க? தீக்குச்சி தேவதைகள்! கரெக்ட்…அப்ப அதுல இருக்குற தேவதைகளைத் தூக்கி…இதுல போடுங்க…! எதுல தெர்மக்கோலிலயா? ஆமா.. தெர்மக்கோல் தேவதைகள்! இதான்..இதான் ஜி..! என் அடுத்த புக்கோட டைட்டில்! என்று சடுதியில் முடிவெடுத்துவிட்டார்..!! அப்படி உருவான தெர்மக்கோல் தேவதைகள் , சுகுமார் சுவாமிநாதனின் அற்புதமான வடிவமைப்பில் புத்தகமாக என் கையில...