மங்களூர் சிவா போட்ட இந்தப்பதிவுதான்,
இந்தப்பதிவுக்குக்காரணம்..
முதலில் எனக்கு பார்த்திபனின் கவிதைதான் ஞாபகத்துக்கு வந்தது!
வாழ்ந்து என்ன
செய்யப்போகிறோம்
செத்துதான்
தொலைப்போமே!
செத்து என்ன
செய்யப்போகிறோம்
வாழ்ந்துதான்
தொலைப்போமே!
இதில் இரண்டு விஷயங்களை அலச வேண்டியிருக்கு!
முதல்ல..ஆண் பெண் உறவுமுறை.. (ஏன்னா இதுதான் அதிகபட்ச உணர்ச்சிவசப்படலுக்கான காரணி)
அடுத்து..தற்கொலை !
இந்த ஆண், பெண் உறவுமுறையை நாம சரியா பாக்கலைங்கறதுதான் பெரிய கொடுமை! அது, அன்றாடம் சம்பாதிச்சு வாழ்க்கை நடத்துறவனா இருந்தாலும் சரி! அடுத்த ஜென்மத்துக்கும் சேத்து சம்பாதிச்சு வச்சு சொகுசு வாழ்க்கை நடத்துற ஆளா இருந்தாலும் சரி..(என்ன இருந்தாலும் மூதாதையர் ஒண்ணுதானே ! )
அவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் பிடிச்சுப்போய். திருமணம் செய்தோ, இல்லாமலோ சேர்ந்து வாழத்துவங்குகிறார்கள்.முதல்ல எல்லாம் சுமுகமாத்தான் போயிக்கிட்டிருக்கும். ஒருத்தர் குறை இன்னொருத்தர் கண்ணுக்குத்தெரியும் வரை ! இந்த இடத்தில் அன்னை தெரசாவின் வாக்கியம் ஞாபகம் வருது.! 'குணத்தைப்பார்க்கத்துவங்கிவிட்டால் நம்மால் அன்புகாட்ட முடியாது!' - ஆனால் சேர்ந்து இருக்கும் கொஞ்ச நாளிலேயே குணத்தை அலச ஆரம்பிப்பதுதான் முதல் பொறி!
இதில் ஓவரா உணர்ச்சிவசப்படுறது ஆண்கள்தான்! சதி லீலாவதியில் ஒரு வசனம் வரும்..." இவன் என்னவேணும்னாலும் பண்ணலாம். பொண்டாட்டி மட்டும் பத்தினியா இருக்கணும். அதேதான் சின்னவீட்டுக்கும்...!"
ஏன்னா, அவள் யாரோடயும் பேசக்கூடாது. பழகக்கூடாதுன்னு வெளிப்படுத்த ஆரம்பிச்சுடுவான். இதுக்கு பொஸஸிவ்நெஸ்ன்னு ஒரு காரணமும் சொல்வான். ஆனால் பொஸஸிவ்நெஸ் நினைப்பெல்லாம் (இது என் பொருள்..எனக்கு மட்டுமே சொந்தம்ன்னு நினைக்கிறது.இதில் பெண்ணும் அடக்கம்..இது ஆதிகாலத்து பழக்கம்.. அதுக்கு ஒரு சாயம்..அதேபோல்தான் பெண்களும் நினைப்பாங்க) சும்மா, பம்மாத்துக்கு! அதைமீறி அவனிடம் இருக்கும் இன்னொரு விஷயம்தான் அடிப்படைக்காரணி...
அது , அவளது சமூக அந்தஸ்து.! -இன்னும் நம்ம மூதாதையர் ஜீன்லேருந்து நமக்கு போகாத மேட்டர்! அவ எப்படி நம்மளை விட நல்ல நிலமைல இருக்கா? அதுவும் புத்திசாலியா வேற இருக்கா? இவ நம்பளை நம்பித்தானே இருந்தாகணும்? ன்னு நினைக்கும் அவன், இவன் இல்லாமலும் அவளால் வாழமுடியுங்கிற உண்மையை ஏத்துக்க முடியாம தவிக்கிறான். அங்கதான் ஆரம்பிக்குது பிரச்னையின் அடுத்த கட்டம்!
அதுவே சந்தேகமா மாறும். சில சமயம் அது உண்மையாவும் இருக்கும்.
உளவியல் படிச்ச ஆளா இதை வேறமாதிரி பாக்கும்போது.....இப்படித்தான் தோணுது!
அவள்.....
அவனிடம் ஏதோ பிடித்துத்தான் அவனோடு இருக்க தொடங்குகிறாள்..!
அவனிடம் ஏதோ பிடிக்காமல்தான் வேறொருவரோடு இருக்க தொடங்குகிறாள்...!
நம்மால் ஒரு குழந்தையைக்கூட, அதோட சம்மதமில்லாம தூக்கி வச்சுக்கமுடியாது. பிடிக்கலைன்னா, கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி இறங்க முயற்சி பண்ணும். அதேபோல் நாம அந்தக்குழந்தையை சமாதானப்படுத்த முயற்சி செய்வோம். அல்லது, எதுக்குடா வம்புன்னு இறக்கி விட்டுடுவோம்.
ஆனா அதே மாதிரி வளந்த குழந்தையான அவள்கிட்ட மட்டும், அவளுக்கே பிடிக்காம நம்ம கூட இருக்கணும்னு நினைக்கிறது, பெரிய அநியாயம்! ஒண்ணு, மனசுவிட்டு பேசி சேந்து இருக்க முயற்சி பண்ணனும். இல்லைன்னா, சந்தோஷமா பிரிஞ்சுடணும். ரெண்டையும் விட்டுட்டு, அடுத்த முடிவெடுக்கிறதுதான் கொடுமை!
பவுனு பவுனுதான் படத்தில், ரோகிணியை,பாக்யராஜ் கல்யாணம் செஞ்சுக்க நேரம் எல்லாம் குறிச்சு வச்சு,வாசல்லயே பந்தல் போட்டிருப்பார். அப்ப அவர்கூட இருக்கும் பொடிப்பசங்கள்ல ஒருத்தன் கேப்பான். பவுனு 9 மணிக்கு வரலைன்னா...ஊர்க்காரங்க அடிப்பாங்களே என்ன பண்றதுன்னு..அப்ப பாக்யராஜ் ஒரு வசனம் சொல்லுவார்....எப்ப பவுனு சொன்ன டயத்துக்கு வரலையோ அப்பவே நான் செத்துட்டமாதிரிதான். அப்புறம் செத்த நாயை எத்தன நாய் அடிச்சா என்ன?
இதுதான் கரெக்ட்... எப்ப அவளோ, அவனோ நம்ம கூட இருக்கறதில் நம்பிக்கையில்லா தீர்மானம் மனசுக்குள்ள கொண்டுவந்துட்டாங்களோ, அப்புறம் பழத்தை அடிச்சு கனியவைக்கிறது கடுமையான வீண்வேலை..! இதில் கற்புக்கெல்லாம் இடமில்லை. ஏன்னா முன்னாடியே தெளிவா சொல்லிட்டான். "கற்பு ஒன்றிருக்குதோ?" ன்னு!
இந்த விஷயத்தில், துரோகம்ங்கிற வார்த்தையை தப்பாத்தான் பயன்படுத்திக்கிட்டிருக்கு ஆண்டாண்டுகாலமா காமத்தை துரோக அளவுகோலா வச்சிருக்கிற நம்ம மனித சமூகம்.!
அவளுக்கோ அவனுக்கோ அப்படி ஒரு நிலைமை வந்தா....'ரொம்ப சந்தோஷம்.. நேத்திக்கு வரைக்கும் என்கூட அன்பா இருந்ததுக்கு நன்றி' ன்னு சொல்லிட்டு, மறுபடியும் பொட்டிதட்ட புறப்பட்டாத்தான், நமக்கு இந்த ஆண், பெண் உறவுமுறையும்,சேந்து வாழும் வாழ்க்கை (திருமணமும் சேத்துதான்) பத்தின தெளிவு ஏற்படும்.
இல்லைன்னா, கொலை, தற்கொலை எல்லாம் செய்தித்தாளை,தினமும் நூறு பக்கம் அச்சடிக்கவேண்டிய கட்டாயத்தை உண்டுபண்ணி நிரப்பிடும்.
ஏன் இந்த தற்கொலை முயற்சிகள்?
படிச்சு டயர்டா இருப்பீங்க...அடுத்த பதிவுல பாக்கலாமே?
இந்தப்பதிவுக்குக்காரணம்..
முதலில் எனக்கு பார்த்திபனின் கவிதைதான் ஞாபகத்துக்கு வந்தது!
வாழ்ந்து என்ன
செய்யப்போகிறோம்
செத்துதான்
தொலைப்போமே!
செத்து என்ன
செய்யப்போகிறோம்
வாழ்ந்துதான்
தொலைப்போமே!
இதில் இரண்டு விஷயங்களை அலச வேண்டியிருக்கு!
முதல்ல..ஆண் பெண் உறவுமுறை.. (ஏன்னா இதுதான் அதிகபட்ச உணர்ச்சிவசப்படலுக்கான காரணி)
அடுத்து..தற்கொலை !
இந்த ஆண், பெண் உறவுமுறையை நாம சரியா பாக்கலைங்கறதுதான் பெரிய கொடுமை! அது, அன்றாடம் சம்பாதிச்சு வாழ்க்கை நடத்துறவனா இருந்தாலும் சரி! அடுத்த ஜென்மத்துக்கும் சேத்து சம்பாதிச்சு வச்சு சொகுசு வாழ்க்கை நடத்துற ஆளா இருந்தாலும் சரி..(என்ன இருந்தாலும் மூதாதையர் ஒண்ணுதானே ! )
அவனுக்கும் அவளுக்கும் ஏதோ ஒரு விதத்தில் பிடிச்சுப்போய். திருமணம் செய்தோ, இல்லாமலோ சேர்ந்து வாழத்துவங்குகிறார்கள்.முதல்ல எல்லாம் சுமுகமாத்தான் போயிக்கிட்டிருக்கும். ஒருத்தர் குறை இன்னொருத்தர் கண்ணுக்குத்தெரியும் வரை ! இந்த இடத்தில் அன்னை தெரசாவின் வாக்கியம் ஞாபகம் வருது.! 'குணத்தைப்பார்க்கத்துவங்கிவிட்டால் நம்மால் அன்புகாட்ட முடியாது!' - ஆனால் சேர்ந்து இருக்கும் கொஞ்ச நாளிலேயே குணத்தை அலச ஆரம்பிப்பதுதான் முதல் பொறி!
இதில் ஓவரா உணர்ச்சிவசப்படுறது ஆண்கள்தான்! சதி லீலாவதியில் ஒரு வசனம் வரும்..." இவன் என்னவேணும்னாலும் பண்ணலாம். பொண்டாட்டி மட்டும் பத்தினியா இருக்கணும். அதேதான் சின்னவீட்டுக்கும்...!"
ஏன்னா, அவள் யாரோடயும் பேசக்கூடாது. பழகக்கூடாதுன்னு வெளிப்படுத்த ஆரம்பிச்சுடுவான். இதுக்கு பொஸஸிவ்நெஸ்ன்னு ஒரு காரணமும் சொல்வான். ஆனால் பொஸஸிவ்நெஸ் நினைப்பெல்லாம் (இது என் பொருள்..எனக்கு மட்டுமே சொந்தம்ன்னு நினைக்கிறது.இதில் பெண்ணும் அடக்கம்..இது ஆதிகாலத்து பழக்கம்.. அதுக்கு ஒரு சாயம்..அதேபோல்தான் பெண்களும் நினைப்பாங்க) சும்மா, பம்மாத்துக்கு! அதைமீறி அவனிடம் இருக்கும் இன்னொரு விஷயம்தான் அடிப்படைக்காரணி...
அது , அவளது சமூக அந்தஸ்து.! -இன்னும் நம்ம மூதாதையர் ஜீன்லேருந்து நமக்கு போகாத மேட்டர்! அவ எப்படி நம்மளை விட நல்ல நிலமைல இருக்கா? அதுவும் புத்திசாலியா வேற இருக்கா? இவ நம்பளை நம்பித்தானே இருந்தாகணும்? ன்னு நினைக்கும் அவன், இவன் இல்லாமலும் அவளால் வாழமுடியுங்கிற உண்மையை ஏத்துக்க முடியாம தவிக்கிறான். அங்கதான் ஆரம்பிக்குது பிரச்னையின் அடுத்த கட்டம்!
அதுவே சந்தேகமா மாறும். சில சமயம் அது உண்மையாவும் இருக்கும்.
உளவியல் படிச்ச ஆளா இதை வேறமாதிரி பாக்கும்போது.....இப்படித்தான் தோணுது!
அவள்.....
அவனிடம் ஏதோ பிடித்துத்தான் அவனோடு இருக்க தொடங்குகிறாள்..!
அவனிடம் ஏதோ பிடிக்காமல்தான் வேறொருவரோடு இருக்க தொடங்குகிறாள்...!
நம்மால் ஒரு குழந்தையைக்கூட, அதோட சம்மதமில்லாம தூக்கி வச்சுக்கமுடியாது. பிடிக்கலைன்னா, கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி இறங்க முயற்சி பண்ணும். அதேபோல் நாம அந்தக்குழந்தையை சமாதானப்படுத்த முயற்சி செய்வோம். அல்லது, எதுக்குடா வம்புன்னு இறக்கி விட்டுடுவோம்.
ஆனா அதே மாதிரி வளந்த குழந்தையான அவள்கிட்ட மட்டும், அவளுக்கே பிடிக்காம நம்ம கூட இருக்கணும்னு நினைக்கிறது, பெரிய அநியாயம்! ஒண்ணு, மனசுவிட்டு பேசி சேந்து இருக்க முயற்சி பண்ணனும். இல்லைன்னா, சந்தோஷமா பிரிஞ்சுடணும். ரெண்டையும் விட்டுட்டு, அடுத்த முடிவெடுக்கிறதுதான் கொடுமை!
பவுனு பவுனுதான் படத்தில், ரோகிணியை,பாக்யராஜ் கல்யாணம் செஞ்சுக்க நேரம் எல்லாம் குறிச்சு வச்சு,வாசல்லயே பந்தல் போட்டிருப்பார். அப்ப அவர்கூட இருக்கும் பொடிப்பசங்கள்ல ஒருத்தன் கேப்பான். பவுனு 9 மணிக்கு வரலைன்னா...ஊர்க்காரங்க அடிப்பாங்களே என்ன பண்றதுன்னு..அப்ப பாக்யராஜ் ஒரு வசனம் சொல்லுவார்....எப்ப பவுனு சொன்ன டயத்துக்கு வரலையோ அப்பவே நான் செத்துட்டமாதிரிதான். அப்புறம் செத்த நாயை எத்தன நாய் அடிச்சா என்ன?
இதுதான் கரெக்ட்... எப்ப அவளோ, அவனோ நம்ம கூட இருக்கறதில் நம்பிக்கையில்லா தீர்மானம் மனசுக்குள்ள கொண்டுவந்துட்டாங்களோ, அப்புறம் பழத்தை அடிச்சு கனியவைக்கிறது கடுமையான வீண்வேலை..! இதில் கற்புக்கெல்லாம் இடமில்லை. ஏன்னா முன்னாடியே தெளிவா சொல்லிட்டான். "கற்பு ஒன்றிருக்குதோ?" ன்னு!
இந்த விஷயத்தில், துரோகம்ங்கிற வார்த்தையை தப்பாத்தான் பயன்படுத்திக்கிட்டிருக்கு ஆண்டாண்டுகாலமா காமத்தை துரோக அளவுகோலா வச்சிருக்கிற நம்ம மனித சமூகம்.!
அவளுக்கோ அவனுக்கோ அப்படி ஒரு நிலைமை வந்தா....'ரொம்ப சந்தோஷம்.. நேத்திக்கு வரைக்கும் என்கூட அன்பா இருந்ததுக்கு நன்றி' ன்னு சொல்லிட்டு, மறுபடியும் பொட்டிதட்ட புறப்பட்டாத்தான், நமக்கு இந்த ஆண், பெண் உறவுமுறையும்,சேந்து வாழும் வாழ்க்கை (திருமணமும் சேத்துதான்) பத்தின தெளிவு ஏற்படும்.
இல்லைன்னா, கொலை, தற்கொலை எல்லாம் செய்தித்தாளை,தினமும் நூறு பக்கம் அச்சடிக்கவேண்டிய கட்டாயத்தை உண்டுபண்ணி நிரப்பிடும்.
ஏன் இந்த தற்கொலை முயற்சிகள்?
படிச்சு டயர்டா இருப்பீங்க...அடுத்த பதிவுல பாக்கலாமே?