Posts

Showing posts from April, 2008

மூட்டை முழுவதும் முரண்பாடு!

Image
இயற்கை சீரழிகிறது மரங்களை வெட்டாதீர்கள் அவைகள் இல்லையென்றால் அவனியே இல்லை! எழுதிவிட்டு புன்னகைத்தான் கவிஞன் ! எதுகை மோனையுடன் மரம் காப்பாற்ற கவிதை எழுதிய காகிதமும் மரம்தான் என்பதை லாவகமாய் மறந்து..! இனி எதில் எழுதினால் மரம் காக்கலாம். ? நீ கவிதை எழுதுவதைக் குறை! நிறைய மரங்கள் மூச்சு விடும். ********************* அரசு மதுக்கடையில் அமிலக்காரமாய் அருந்திவிட்டு வண்டியில் போனால் பிடிக்கிறார்கள் குடித்துவிட்டு ஓட்டினேனாம்! அப்ப எதுக்குய்யா பார் வச்சு குடிக்க பக்குவமா சொல்றீங்க! குடிச்சவன் வீட்டுக்கு உருண்டுக்கிட்டா போவான்? ************************ பையனை கடத்தி அப்பனுக்கு செல்லில் பேசினா பிடிச்சுருவான்னு பயந்து லெட்டரில் எழுதி அனுப்பி வச்சேன் மகனைப்பாத்து சொன்னேன் ஒங்க அப்பனிடம் கொண்டு கொடு! பயந்துக்கிட்டு பணம் குடுப்பான்!

புறம் ஒழிஞ்சாத்தான் அகத்துக்கு நல்லது..! - 2

பெரிய பெரிய நிறுவனங்கள்ல எல்லாம், எவ்வளவு பெரிய திறமைசாலியா இருந்தாலும், இந்த மாதிரி புறம் சொல்லும் குணமுள்ளவுங்களை வெளில அனுப்பிடுவாங்க..! ஏன்னா புறம் கூறும் நபர்களாலத்தான் ஒரு நல்ல நிறுவனம் அழிஞ்சு போகும்ன்னு அவுங்களுக்கு தெரியும். பாட்சா படத்துல தேவன் நக்மாவோட அப்பாவா வருவாரு! அவர்தான் பாட்சாவான ரஜினிக்கிட்ட நல்லவர் மாதிரி நடிச்சு, அவரைப்பத்தி ரகுவரன்கிட்ட புறம் சொல்லி ஏமாத்தப்பாப்பாரு! அதைக்கண்டுபிடிச்சு ரஜினி தப்பிச்சுடுவாரு...அதே சமயம் கூட இருந்தே ஏமாத்தின தேவன் தான் தன் குடும்பத்தை கொன்னதுன்னு தெரிய வ்ந்ததும் ரகுவரனே , தேடிவந்து தேவனை கொன்னுடுவாரு! இதுதான் புறம் கூறுபவர்களோட நிலமை! இந்த குணத்தை விரட்ட , முடிஞ்சவரைக்கும் ,அடுத்தவுங்களை குறை சொல்லாம இருக்கலாம். அப்படி சொல்றதா இருந்தா அவுங்க முன்னாடியே சொல்லிடலாம். அதை விட்டுட்டு, கோழைத்தனமா பின்னாடி போய் அவுங்களைப்பத்தி சொன்னா, அதை ரகசியமாவே சொன்னாலும் அது ஒரு நாள் வெளில வந்து நமக்கு அவமானமா போயிடும். வெளிவராமல் போன ஜக்குபாய் பட போஸ்டரில் ஒரு வாசகம் இருக்கும்...இறைவா! நண்பர்களிடமிருந்து என்னைக்காப்பாற்று! எதிரிகளை நான் பார்த்துக்க

புறம் ஒழிஞ்சாத்தான் அகத்துக்கு நல்லது..!

ஒருத்தர் , நமக்கு நேரா நம்மளை உயர்வா பேசிட்டு, அடுத்தவுங்ககிட்ட நம்மளைப்பத்தி இழிவா பேசுறது நமக்கு என்னிக்குமே பிடிக்காது. ஆனா அதை நம்ம பண்ணினா ரசிச்சு பண்ணுவோம். ஏன்னா புறம் சொல்றதுங்கறது நமக்குள்ள ஊறிப்போச்சு! திருக்குர்ரான் சொல்லுது ! ஒருவனைப்பற்றி புறம் கூறுதல் தன்னுடைய சகோதரனுடைய மாமிசத்தை சாப்பிடுவதற்குச்சமம். ! அந்த அளவுக்கு அதில் என்ன கெடுதல் இருக்கமுடியும்? இது சாதாரண விஷயமில்லை. நம்மை படுகுழில தள்ளிடும். புறம் கூறும் மனப்பான்மை உள்ளவுங்க வெற்றிக்கோட்டை தொடவே முடியாது. கண்நின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க முன்இன்று பின்நோக்காச் சொல். முகத்திற்கு முகம், இரக்கமே இல்லாமல், நாம் கடுஞ் சொற்களைக் கூறினாலும், கூறலாம். ஆனால், கண் எதிரே, ஆள் இல்லாத பொழுது, ஒருவரைப் பற்றி மட்டும், இழிவாகப் பேசுதல் கூடாதுன்னு வள்ளுவரே சொல்றார். மொக்கச்சாமி ஒரு விமானத்துல போய்க்கிட்டிருந்தார். அப்ப அவர் சீட்டுக்குப்பக்கத்துல, ஒருத்தர் சாதாரணமா உக்காந்திருந்தார். அவர்க்கிட்ட மொக்கச்சாமி மெதுவா பேச்சுக்குடுத்தார். இவரு தன்னைப்பத்தி ரொம்ப பெருமையா பீத்திக்கிட்டார். போகப்போக பக்கத்தில் உள்ளவர் வியக்கற மாதிரி

தள்ளிப்போட்டால்....!

இன்னிக்கு பாக்கவேண்டிய இந்த பதிவை அப்புறம் பாத்துக்கலாம்னு தள்ளிப்போட்டீங்கன்னா ..இந்த விஷயம் உங்களுக்கு தெரியாமலேயே போயிருக்கும். நல்ல வேளை தள்ளிப்போடலை.! ஒரு சினிமா நாளைக்கு ரிலீஸ் ஆகுதுன்னா...என்னமோ நாளைக்கே அதோட ரீல் எல்லாத்தையும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிடுவாங்கங்கிற மாதிரி...ரொம்ப வேகமா..கூட்டத்துல சட்டை கிழிஞ்சாலும் பரவாயில்லைன்னு முதல்நாள் முதல் ஷோ பாத்தேன்னு சொல்லிக்கிற பெருமைக்காகவே போய் பாத்துட்டு வந்து லந்து பண்ணிக்கிட்டிருப்போம். அதை ஒரு வாரம் தள்ளிப்போட்டா சந்தோஷமா இரைச்சல் இல்லாம படம் பாக்கலாம். நம்ம கூடப்படிச்ச நண்பன் ஒரு வேலைக்கு அப்ளை பண்ணும்போது, நான் நாளைக்கு பண்ணிக்கிறேண்டான்னு சொல்லிட்டு அப்புறம் கடைசி நாள் , நேத்திக்கே முடிஞ்சுபோச்சேன்னு கவலைப்பட்டுக்கிட்டிருக்கும்போதே...அப்ளை பண்ணின நண்பனுக்கு அந்த வேலை கிடைச்சுட்டா , ச்சே! எனக்கு அதிர்ஷ்டமே இல்லைன்னு புலம்பிக்கிட்டிருந்திருப்போம். (இப்படி பலப்பல புலம்பல்களுக்கு காரணமே தள்ளிப்போடுதல்தான்) முதல்நாளே அதை உடனே தள்ளிப்போடாம செஞ்சிருந்தா நமக்கும் வேலை கிடைச்சிருக்கும். அப்படின்னா எதை தள்ளிப்போடணும் , எதை தள்ளிப்ப

குசும்பன் கல்யாணம் சூப்பரு!

Image
குசும்பன் கல்யாணத்துல , அவரோட அப்பாவியான போஸ் பாத்துக்குங்க! அதிகமான  பதிவர்கள் வருகையோடு நண்பர் குசும்பனின் கல்யாணம் சூப்பரா நடந்துச்சு! தாலி கட்றப்ப பதிவர்கள் யாரும் பக்கத்துல இல்ல ! (தூரமா நின்னு வாழ்த்தினாங்க) நம்ம குசும்பன் கஷ்டப்பபடுறதை யாராலயும் தாங்கிக்கமுடியாததாலத்தான்னு நினைக்கிறேன்.  :) பொடியன், மங்களூரார், நாமக்கல் சிங்கம், இம்சை அண்ணாச்சி, அபி , அபி அம்மா, நட்டு... அப்புறம் அவுங்ககூட யாரோ கெச்சலா...ஆங்க்.. அபி அப்பா! , நாகை புலி, ஜ்ஜேக்கே, ஜிஜிஜி, காய3, கவி ஜூனியர்  நானு எல்லாரும் போய் கல்யாண மண்டபத்தில் சமைச்ச  சாப்பாடு வீணாகாம பாத்துக்கிட்டோம்.  எங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு  கூத்தடிச்சுட்டு ஊரைப்பாக்க எஸ்கேப்...! வாழ்க குசும்பன்!

பிரச்னையைச் சொல்லுங்க!

            சில சமூக இயக்கங்களில் பணியாற்றிவரும் நான், நுகர்வோர் அமைப்புகளில் அதிக நாட்டம் கொண்டவன். அந்த வகையில், தமிழ்நாடு நுகர்வோர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில செயலாளராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாரம்தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா பதிவர்களும், நுகர்வோர் உரிமை சம்பந்தமான எந்தப்பிரச்னைக்கும் எங்களை அணுகலாம். தகுந்த உதவிகள் செய்துகொடுக்கப்படும். புகார்களையும் தெரிவிக்கலாம். அந்தந்த மாவட்ட இயக்கங்கள் மூலம் மேல் நடவடிக்கை எடுக்க ஆவண செய்யப்படும். நம் விழிப்புணர்வுதான், வியாபாரிகளை தவறு செய்யவிடாமல் தடுக்கும். மின்னஞ்சல் முகவரி : tnnugarvor@yahoo.com

திருவிழான்னு வந்தா....!

Image
இன்று ஊருக்குப்பக்கத்தில் ஒரு கிராமத்திருவிழா.! எப்பவும்போல, கேமிராவுடன் போனதால் சிக்கிய காட்சிகள் இவை!   கிளி எடுத்துத்தரும் சீட்டைப்பாத்து கிழவி குரலில் டேப் ரெக்கார்டர் பலன் சொல்ல, வண்டியை போத்தியிருக்கும் வாசகங்கள் சிரிப்பை வரவழைக்க பக்கத்துக்கடைக்காரர் பீட்டர் இங்க்லாண்ட் வாடிக்கையாளரை எதிர்பார்த்து..! (அவரிடம் ஒரு சட்டை வாங்கினேன்)   திடீர்க்கடைகளில் திடீர் பக்தியும், திடீர் படிப்பும்.. சிறந்த நெட்வொர்க்கும்! (இளையராஜா பாடல்கள் வாங்கினேன்)   இந்த கோபுரங்களுக்குப்பின்னே எத்தனை கடன்கள், கவலைகள், எதிர்பார்ப்புகள்! கோபுரங்கள் அழிந்தால்தான் வீட்டில் மகிழ்ச்சி வரும். (சீனிக்காராச்சேவு வாங்கினேன்) சத்தியமாய் எனக்காக இல்லை!   வாழ்க்கை மீதுள்ள  இவர்களது நம்பிக்கைக்காக!

என்னய்யா நடக்குது இங்க? - ஒகேனக்கல் எங்க இருக்கு?

உங்க வீட்டுக்குள்ள ஒருத்தன் நுழையுறான். ! என்ன குழம்பு? ங்குறான். யாருன்னே தெரியலை! இருந்தாலும் 'வெண்டைக்காய்' ன்னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே நான் வெண்டைக்காய் வாங்கின கடையிலதான் நீயும் வாங்கின! அதுனால இந்த வெண்டைக்காயும், அதவச்சு செஞ்ச குழம்பும் இப்ப என்னுது! அதுக்கும்மேல இனிமே வெண்டக்காயை வச்சு எது பண்றதா இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்த சொல்லு.. அப்பதான் அதைப்புடுங்கிட்டுப்போக வசதியா இருக்கும்!  நானே வந்து வாங்கினதால அந்த காய்கறிக்கடையையும் நாந்தான் எடுத்துக்குவேன். அதெப்புடி என் வெண்டக்காய வச்சு சமைக்கிற எடத்துல டிவி, பைக்கெல்லாம் வச்சிருக்க! ன்னு அடிச்சு நொறுக்கிட்டு போயிடுறான். இப்புடி ஒருத்தன் வந்து அடாவடி பண்றதுக்கும் கர்நாடகா அடாவடி பண்றதுக்கும் பெரிய வித்யாசம் ஒண்ணே ஒண்ணுதான். அது வெண்டைக்காய்...இது பல மனிதர்களின் வயிறுக்காய்..! ஆமா..நான் தெரிஞ்சும் - தெரியாமத்தான் கேக்குறேன் என்னய்யா நடக்குது இங்க ? ஒகேனக்கல் என்ன ஜப்பான்லயா  இருக்கு? (அவன் கூட இவ்வளவு   பண்ணமாட்டான் போல இருக்கே!) அப்ப நாம எந்த நாட்டில இருக்கோம். இந்தியாங்குறது உண்மையிலேயே ஒரே தேசமா? இல்ல சும்மா உலு