தேடிக் காதல் நிதம் தின்று...
‘தேடிக்காதல் நிதம் தின்று... ’ என்ற தலைப்பில் முகநூலில் இந்த ஆண்டில் எழுதிய கவிதைகளில் சில இங்கே...
அண்டப் பெருவெளியில்
ஆகாசக் கொப்புளங்களின்
மூர்க்கச் சீற்றங்களாய்
மொய்த்திருக்கும் சர்ப்பச்
சிறகுகளுக்குள்
சாத்திரச் சங்கிலிகள்
சதிராடிப் போட்டுடைத்த
வெப்பக் காற்றுப் பந்தாய்
வெடித்துக்கிளம்பும்
சூனியத்தின் நாற்றங்காலில்
பார்வை எரிக்குழம்பால்
மகரந்த இதயத்தில்
சூலுண்டாக்கி,
ஒற்றை நீர்த்துளியை
வார்த்துச் சென்றாய்
நீ!
படித்துப் பார்த்துவிட்டு
வாவ்!
நீ கவிஞன் டா என்று
சொல்லிக்கொண்டே
கொடுக்கும்,
உன்
முன் நவீன முத்தத்துக்காக
பின் நவீனம் பிதற்றுகிறேன்
நான்!
உன்னைப்
பெற்ற
கர்வத்தில்
உன்
அப்பாவும்
கொஞ்சம்
அதிகமாய்த்தான்
ஆடுகிறார்.
நீயெல்லாம்
என்னத்த
படைச்ச..?
என்று
பிரம்மனைப்
பார்த்து
நக்கலடிக்கிறாராம்.!
பெற்ற
கர்வத்தில்
உன்
அப்பாவும்
கொஞ்சம்
அதிகமாய்த்தான்
ஆடுகிறார்.
நீயெல்லாம்
என்னத்த
படைச்ச..?
என்று
பிரம்மனைப்
பார்த்து
நக்கலடிக்கிறாராம்.!
aaaaaaaa
வருடம்
பிறக்கும்
வினாடியில்
12 முத்தம்
தரவேண்டும்
என்றாய்!
இது
என்ன
கள்ள ஆட்டம்?
அது 2012 தானே?
அவ்வளவும்
வாங்கிக்
கொண்டுதான்
விடுவேன்.!!
aaaaaaaa
உன்னைப்
பார்க்க
ஒவ்வொரு
ஆண்டும்
வரிசையில்
நிற்கிறதாம்!
போகும் 2011
ஒரே புலம்பல்!
இது 2012ன்
வாய்ப்பாம்..!
அதைப்போய்
புத்தாண்டு
என்று
கொண்டாடுகிறார்கள்
பாவம்!
பார்க்க
ஒவ்வொரு
ஆண்டும்
வரிசையில்
நிற்கிறதாம்!
போகும் 2011
ஒரே புலம்பல்!
இது 2012ன்
வாய்ப்பாம்..!
அதைப்போய்
புத்தாண்டு
என்று
கொண்டாடுகிறார்கள்
பாவம்!
aaaaaaaa
நான்
அப்போதே
சொன்னேன்
அடிக்கடி
மெரீனா போகாதே
என்று!
இப்போது பார்!
அது ’தானே’
கிளம்பி
குடும்பத்துடன்
ஊருக்குள் வருகிறது
உன்னைப்பார்க்க!
aaaaaaaa
உன்
உடைகளைப்
பற்றிக்கொள்ள
குத்திக்கொள்ளும்
ஊக்குகளுக்குள்
ஒரே பிரச்சனை!
உன் உடையைக்
குத்துவதா என்று!
மொக்கையாகியே
வளைகின்றன..
அப்போதுதான்
உன்
வாயால் அதை
நிமிர்த்துவாயாம்!
களவாணிப்பய
ஊக்குகள்!
உடைகளைப்
பற்றிக்கொள்ள
குத்திக்கொள்ளும்
ஊக்குகளுக்குள்
ஒரே பிரச்சனை!
உன் உடையைக்
குத்துவதா என்று!
மொக்கையாகியே
வளைகின்றன..
அப்போதுதான்
உன்
வாயால் அதை
நிமிர்த்துவாயாம்!
களவாணிப்பய
ஊக்குகள்!
aaaaaaaa
ஒரு
பட்டை
ஸ்டிக்கர்
பொட்டு
வாங்கினாயாம்.
ஒற்றைப் பொட்டு
ஒட்டிக்கொண்டு
உன்னை விட்டு
அகல மறுக்கிறதாம்.
இதைச்சொல்லி
ஒரு பஞ்சாயத்து
இன்று வந்திருக்கிறது.
மற்ற பொட்டுகளுக்கும்
வாய்ப்புக்கொடேன்.
பட்டை பொட்டுக்கள்
மோட்சம் பெறட்டும்!
aaaaaaaa
நீ
போட்ட
மார்கழி
மாக்கோலத்தை
மட்டும்
உண்ண விடாமல்
ஆண் எறும்புகள்
அடாவடி
செய்கின்றனவாம்!
ஏரியா பெண்
எறும்புகள்
ஏகோபித்துப்
புகார்
கொடுக்கின்றன!
இன்று உண்டால்தானே
நாளையும் கோலம் போட
வருவாள்.
உன்னைப் பார்க்கமுடியும்
என்று ஆறுதல் சொல்லச்சொல்லி
அனுப்பியிருக்கிறேன்.
மார்கழி
மாக்கோலத்தை
மட்டும்
உண்ண விடாமல்
ஆண் எறும்புகள்
அடாவடி
செய்கின்றனவாம்!
ஏரியா பெண்
எறும்புகள்
ஏகோபித்துப்
புகார்
கொடுக்கின்றன!
இன்று உண்டால்தானே
நாளையும் கோலம் போட
வருவாள்.
உன்னைப் பார்க்கமுடியும்
என்று ஆறுதல் சொல்லச்சொல்லி
அனுப்பியிருக்கிறேன்.
ம்..
எதற்கும்,
உன் அம்மாவையே
கோலம் போட அனுப்பேன்.
எறும்பாயிருந்தாலும்..
பொறுக்கவில்லை!
எதற்கும்,
உன் அம்மாவையே
கோலம் போட அனுப்பேன்.
எறும்பாயிருந்தாலும்..
பொறுக்கவில்லை!
aaaaaaaa
கிறிஸ்துமஸ்
தாத்தாவைப்
பார்த்து
என் விருப்பமாக
உன்னைக் கேட்டால்
வெடிச் சிரிப்புகிறார்.
போடா! போ!
அவ ஏற்கனவே
உன்னைக் கேட்டா!
மொத்த பூமியையும்
வச்சுக்கோன்னுட்டு
நான் பையை
உதறிட்டேன்
பரிசால்,
பரிசு கேட்கமுடியாது
போடா!
என்றார்....!
aaaaaaaa
நீ
வெட்டிப்போட்ட
நகத்துணுக்குகளை
பிறை
நிலாவாக்கி
அழகு
பார்க்கிறது
வானம்!
நட்சத்திரங்கள்
எப்படி என்றேன்.
உன்
வியர்வைத்
துளிகளின்
வேலை
என்றது.
வெட்டிப்போட்ட
நகத்துணுக்குகளை
பிறை
நிலாவாக்கி
அழகு
பார்க்கிறது
வானம்!
நட்சத்திரங்கள்
எப்படி என்றேன்.
உன்
வியர்வைத்
துளிகளின்
வேலை
என்றது.
aaaaaaaa
நீ
தினசரி
வரும்
ஒரே
காரணத்துக்காக
பிரம்மச்சரியத்தை
விடுவதாய்
அனுமன்
சொன்னதாய்
அஞ்சனை
என் கனவில் வந்து
ஒரே புலம்பல்!
கோவிலை
மாற்றேன்.!
அனுமன்
பிழைத்துப்போகட்டும்!
aaaaaaaa
கந்தர்வ
குளத்தில்
இரண்டு
கயல்களைக்
காணவில்லை என்று
ஒரே அழுகை!
உன்
கண்களைப்
பார்க்க
விட்டுவிட்டார்கள்
பாவம்!
குளத்தில்
இரண்டு
கயல்களைக்
காணவில்லை என்று
ஒரே அழுகை!
உன்
கண்களைப்
பார்க்க
விட்டுவிட்டார்கள்
பாவம்!
aaaaaaaa
உன்
இதழ்
சுவைத்தபின்
தினமும்
தேவர்களைத்
திட்டுகிறேன்
எவண்டா
அமுதம்
சுவையானது
என்று
சொன்னது?
aaaaaaaa
உன் மொபைலின்
பட்டன்களுக்குள்
பாரபட்சம்
காட்டுகிறாயாம்!
Z ம் X ம் ஒரே அழுகை!
எல்லா எழுத்துக்களும்
பயன்படுத்தி
எஸ். எம்.எஸ்
அனுப்புகிறாள்.
எங்களை
எதற்கேனும்
பயன்படுத்தச்
சொல்லேன்
என்கின்றன..!
நான் தான்
இருக்கிறேனே
பெறுநராய் உன்
பேரடிமை!
zzzzzzzzzzz
xxxxxxxxxx
என்றாவது
ஒரு எஸ்.எம்.எஸ்
அனுப்பு
இரு எழுத்துக்களும்
மோட்சம்
பெறட்டும்!
அஃறிணையும்
அசரடிக்கும்
அழகியை
அடைந்ததற்கு,
நான்
இதைத்தான்
செய்யமுடியும்!
aaaaaaaa
வெட்டிப்பேச்சாக
இருந்தாலும்
தொட்டுப் பேசினால்
பட்டுப்பூவைப்போல்
இருக்கிறதென்று
சொன்னேன்.
நீ
ரொம்ப
கெட்டுப்போய்விட்டாய்
என்று
கைகளால்
கன்னத்தைக்
கிள்ளுகிறாய்!
அட!
பூவைக் கிள்ளி
பார்த்திருக்கிறேன்
பூவே கிள்ளி
பார்க்கிறேன்
என்றேன்...
அதற்கு
ஏன்
’அப்படிச்’
செய்தாய்?
உன் மூக்குநுனி
வியர்வைத்துளிக்கும்
சூரியனுக்கும்
பஞ்சாயத்து!
எவ்வளவுதான்
சுட்டெரித்தாலும்
காயமாட்டேன்
என்கிறதாம்!
சூரியனின்
வேலை
கெடுகிறதாம்!
அவள்
தொட்டுத்
துடைக்கட்டும்
போகிறேன்
என்கிறது
வியர்வை!
துடைத்துத்
தொலைத்து
விடு!
ஆனால்..
யார் யாரெல்லாம்
எனக்குப் போட்டி?
வியர்வைத்துளிக்கும்
சூரியனுக்கும்
பஞ்சாயத்து!
எவ்வளவுதான்
சுட்டெரித்தாலும்
காயமாட்டேன்
என்கிறதாம்!
சூரியனின்
வேலை
கெடுகிறதாம்!
அவள்
தொட்டுத்
துடைக்கட்டும்
போகிறேன்
என்கிறது
வியர்வை!
துடைத்துத்
தொலைத்து
விடு!
ஆனால்..
யார் யாரெல்லாம்
எனக்குப் போட்டி?
aaaaaaaa
உன்னைப்
புரிந்துகொள்ளவே
முடியவில்லை
என்று
நீ
சொல்லும்
ஒவ்வொருமுறையும்,,
நீ
எவ்வளவு
புரிந்துகொண்டுள்ளாய்
என்று
வியக்கிறேன்.
உன் புரிதலின்
வெம்மையில்
வியர்க்கிறேன்.
பலநூறு ஆண்டுகளாய்
மஞ்சள் பூசி வளர்ந்த
ஸ்ட்ராபெரிப் பழங்கள்
உன் இதழ்களில் பட்டதும்.
வெட்கத்தில்
வேட்கையில்
சிவப்பாய்
மாறியதில் ஏற்பட்ட
இரசாயன மாற்றம்
ஏழேழு ஜென்மமாய்த்
தொடர்கிறதாம்.
ஸ்ட்ராபெரிப் பழங்களின்
நிறத்தின் இரகசியத்தை
நேற்று ஒரு பழம்
போட்டு உடைத்தது.
பதிலுக்கு...சிபாரிசாய்
என்னிடம் கேட்கிறது
’அவள் இதழில் சாகவேண்டும்
அனுமதி தருவாயா?’
ஸ்ட்ரா பெரியெல்லாம் எனக்கு
சக்களத்தனா?
சித்திரை நிலவும்
நித்திரை கலைக்கும்
கத்திரி வெயிலிலும்
கனவுகள் பிறக்கும்!
பகல் பத்தரை மணிக்கெல்லாம்
பனித்துளி தெறிக்கும்
உன் முத்திரைப் புன்னகை
முகத்திரை கிழிக்கும்.
கத்தினால் கூட
காந்தர்வம் ஒலிக்கும்
பத்திரமாய் இரு என
பாற்கடல் தவிக்கும்!
நீ
மொத்தினால் கூட
மெத்தென்று இருக்கும்!
உனைப்
பெத்தவன் காலில் விழ
பெருங்கூட்டம் துடிக்கும்!
சத்தியம் சடுதியில்
சகலமும் துறக்கும்.
உன்
முத்த வாய் தீண்டலில்
மோட்சமும் கிடைக்கும்
இனி
எத்தனை கவிதைகள்
எதுகையில் பிறக்கும்?
என்னை வேறொருவன்
காதலித்து..
அவனை
எனக்கும்
பிடித்திருந்தால்
என்னடா
செய்வாய்
என்று
கேட்டாள்
என்னை,
இத்தனை நாள்
காதலித்தவள்..!
வருத்தத்துடன்
ஆரம்பித்தேன்.
உன்
விருப்பமே
என்
விருப்பமடி..!
அவன்
கையில்
உன் கை கொடுத்து
சொல்வேன்..!
இன்னிலேருந்து
நீ
சாவுடா..!
(இது மட்டும் கொஞ்சம்
வம்பாக எழுதியது)
aaaaaaaa
என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
ReplyDelete2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
மிக்க நன்றி!
Deleteஅருமை.
ReplyDeleteமிக்க நன்றி சார்!
ReplyDeleteசுரேகாஜி,
ReplyDelete//தேடிக் காதல் நிதம் தின்று...//
காதல் பசியெடுத்த காசநோவா ரேன்ஞ்சில தலைப்பு இருக்கே ,அப்போ தினம் ஒரு காதலா :-))
மகிழ்வான ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!
மிக்க நன்றி வவ்வாலு..!! உங்களுக்கும் எனது புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்
Delete
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்
அன்புடன்
மதுரைத்தமிழன்
மிக்க நன்றி மதுரைத் தமிழன்..
DeleteThank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ReplyDeleteCorporate English classes in Chennai
Communicative English training center
English training for corporates
Spoken English training
Workplace Business English training institute
Workplace English training for corporates
Workplace soft skills training institutes
Corporate language classes
Business English training for Workplace