தேடிக் காதல் நிதம் தின்று...


‘தேடிக்காதல் நிதம் தின்று... ’ என்ற தலைப்பில் முகநூலில் இந்த ஆண்டில் எழுதிய கவிதைகளில் சில இங்கே...




அண்டப் பெருவெளியில்

ஆகாசக் கொப்புளங்களின்
மூர்க்கச் சீற்றங்களாய்
மொய்த்திருக்கும் சர்ப்பச் 
சிறகுகளுக்குள் 
சாத்திரச் சங்கிலிகள்
சதிராடிப் போட்டுடைத்த 
வெப்பக் காற்றுப் பந்தாய்
வெடித்துக்கிளம்பும்
சூனியத்தின் நாற்றங்காலில்
பார்வை எரிக்குழம்பால்
மகரந்த இதயத்தில்
சூலுண்டாக்கி, 
ஒற்றை நீர்த்துளியை 
வார்த்துச் சென்றாய்
நீ!



படித்துப் பார்த்துவிட்டு
வாவ்!
நீ கவிஞன் டா என்று 
சொல்லிக்கொண்டே
கொடுக்கும்,
உன்
முன் நவீன முத்தத்துக்காக
பின் நவீனம் பிதற்றுகிறேன்
நான்!


                aaaaaaaa

உன்னைப்
பெற்ற
கர்வத்தில்
உன்
அப்பாவும்
கொஞ்சம்
அதிகமாய்த்தான்
ஆடுகிறார்.

நீயெல்லாம்
என்னத்த
படைச்ச..?
என்று 
பிரம்மனைப்
பார்த்து
நக்கலடிக்கிறாராம்.!

aaaaaaaa

வருடம் 

பிறக்கும்

வினாடியில்

12  முத்தம்

தரவேண்டும்

என்றாய்!


இது 
என்ன
கள்ள ஆட்டம்?

அது 2012 தானே?
அவ்வளவும்
வாங்கிக்
கொண்டுதான்
விடுவேன்.!!

aaaaaaaa

உன்னைப்
பார்க்க 
ஒவ்வொரு 
ஆண்டும்
வரிசையில்
நிற்கிறதாம்!
போகும் 2011
ஒரே புலம்பல்!

இது 2012ன் 
வாய்ப்பாம்..!
அதைப்போய்
புத்தாண்டு
என்று
கொண்டாடுகிறார்கள்
பாவம்!
aaaaaaaa
நான்

அப்போதே

சொன்னேன்

அடிக்கடி

மெரீனா போகாதே 

என்று!


இப்போது பார்!
அதுதானே
கிளம்பி
குடும்பத்துடன்
ஊருக்குள் வருகிறது
உன்னைப்பார்க்க!


aaaaaaaa

உன் 
உடைகளைப் 
பற்றிக்கொள்ள
குத்திக்கொள்ளும்
ஊக்குகளுக்குள் 
ஒரே பிரச்சனை!

உன் உடையைக் 
குத்துவதா என்று!
மொக்கையாகியே
வளைகின்றன..

அப்போதுதான்
உன்
வாயால் அதை 
நிமிர்த்துவாயாம்!

களவாணிப்பய
ஊக்குகள்!

aaaaaaaa





ஒரு பட்டை

ஸ்டிக்கர் பொட்டு 

வாங்கினாயாம்.

ஒற்றைப் பொட்டு

ஒட்டிக்கொண்டு

உன்னை விட்டு

அகல மறுக்கிறதாம்.

இதைச்சொல்லி
ஒரு பஞ்சாயத்து
இன்று வந்திருக்கிறது.

மற்ற பொட்டுகளுக்கும்
வாய்ப்புக்கொடேன்.
பட்டை பொட்டுக்கள்
மோட்சம் பெறட்டும்!


aaaaaaaa

நீ போட்ட
மார்கழி
மாக்கோலத்தை
மட்டும்
உண்ண விடாமல்
ஆண் எறும்புகள்
அடாவடி 
செய்கின்றனவாம்!
ஏரியா பெண்
எறும்புகள்
ஏகோபித்துப்
புகார் 
கொடுக்கின்றன!

இன்று உண்டால்தானே
நாளையும் கோலம் போட
வருவாள்.
உன்னைப் பார்க்கமுடியும்
என்று ஆறுதல் சொல்லச்சொல்லி
அனுப்பியிருக்கிறேன்.

ம்..
எதற்கும்,
உன் அம்மாவையே
கோலம் போட அனுப்பேன்.
எறும்பாயிருந்தாலும்..

பொறுக்கவில்லை!

aaaaaaaa

கிறிஸ்துமஸ்

தாத்தாவைப்

பார்த்து

என் விருப்பமாக

உன்னைக் கேட்டால்

வெடிச் சிரிப்புகிறார்.

போடா! போ!
அவ ஏற்கனவே
உன்னைக் கேட்டா!

மொத்த பூமியையும்
வச்சுக்கோன்னுட்டு
நான் பையை
உதறிட்டேன்

பரிசால்,
பரிசு கேட்கமுடியாது
போடா!
என்றார்....!


aaaaaaaa

நீ
வெட்டிப்போட்ட
நகத்துணுக்குகளை
பிறை
நிலாவாக்கி
அழகு 
பார்க்கிறது
வானம்!

நட்சத்திரங்கள் 
எப்படி என்றேன்.
உன்
வியர்வைத்
துளிகளின்
வேலை
என்றது.

aaaaaaaa


நீ தினசரி வரும்

ஒரே காரணத்துக்காக

பிரம்மச்சரியத்தை

விடுவதாய்

அனுமன்

சொன்னதாய்

அஞ்சனை
என் கனவில் வந்து
ஒரே புலம்பல்!

கோவிலை 
மாற்றேன்.!

அனுமன்
பிழைத்துப்போகட்டும்!


aaaaaaaa

கந்தர்வ
குளத்தில்
இரண்டு 
கயல்களைக்
காணவில்லை என்று
ஒரே அழுகை!
உன்
கண்களைப்
பார்க்க
விட்டுவிட்டார்கள்
பாவம்!
aaaaaaaa

உன் 

இதழ் 

சுவைத்தபின்

தினமும்

தேவர்களைத்

திட்டுகிறேன்

எவண்டா
அமுதம்
சுவையானது
என்று
சொன்னது?

aaaaaaaa


உன் மொபைலின்
பட்டன்களுக்குள்
பாரபட்சம்
காட்டுகிறாயாம்!

Z
ம் X ம் ஒரே அழுகை!

எல்லா எழுத்துக்களும்
பயன்படுத்தி
எஸ். எம்.எஸ்
அனுப்புகிறாள்.

எங்களை 
எதற்கேனும்
பயன்படுத்தச் 
சொல்லேன்
என்கின்றன..!

நான் தான்
இருக்கிறேனே
பெறுநராய் உன்
பேரடிமை!

zzzzzzzzzzz
xxxxxxxxxx
என்றாவது
ஒரு எஸ்.எம்.எஸ்
அனுப்பு

இரு எழுத்துக்களும்
மோட்சம் 
பெறட்டும்!

அஃறிணையும்
அசரடிக்கும்
அழகியை
அடைந்ததற்கு,
நான்
இதைத்தான்
செய்யமுடியும்!
aaaaaaaa


வெட்டிப்பேச்சாக

இருந்தாலும்

தொட்டுப் பேசினால்

பட்டுப்பூவைப்போல்

இருக்கிறதென்று 

சொன்னேன்.



நீ

ரொம்ப

கெட்டுப்போய்விட்டாய்

என்று

கைகளால்

கன்னத்தைக்
கிள்ளுகிறாய்!

அட!
பூவைக் கிள்ளி
பார்த்திருக்கிறேன்
பூவே கிள்ளி
பார்க்கிறேன்
என்றேன்...

அதற்கு
ஏன்
அப்படிச்
செய்தாய்?


aaaaaaaa





உன் மூக்குநுனி 
வியர்வைத்துளிக்கும்
சூரியனுக்கும்
பஞ்சாயத்து!

எவ்வளவுதான்
சுட்டெரித்தாலும்
காயமாட்டேன்
என்கிறதாம்!

சூரியனின்
வேலை
கெடுகிறதாம்!

அவள்
தொட்டுத்
துடைக்கட்டும்
போகிறேன்
என்கிறது
வியர்வை!

துடைத்துத்
தொலைத்து
விடு!

ஆனால்..

யார் யாரெல்லாம்
எனக்குப் போட்டி?

aaaaaaaa
உன்னைப்
புரிந்துகொள்ளவே
முடியவில்லை
என்று நீ சொல்லும்
ஒவ்வொருமுறையும்,,
நீ
எவ்வளவு
புரிந்துகொண்டுள்ளாய்
என்று
வியக்கிறேன்.
உன் புரிதலின்
வெம்மையில்
வியர்க்கிறேன்.




பலநூறு ஆண்டுகளாய்

மஞ்சள் பூசி வளர்ந்த 

ஸ்ட்ராபெரிப் பழங்கள்

உன் இதழ்களில் பட்டதும்.

வெட்கத்தில்

வேட்கையில்

சிவப்பாய்
மாறியதில் ஏற்பட்ட
இரசாயன மாற்றம்
ஏழேழு ஜென்மமாய்த் 
தொடர்கிறதாம்.

ஸ்ட்ராபெரிப் பழங்களின்
நிறத்தின் இரகசியத்தை
நேற்று ஒரு பழம் 
போட்டு உடைத்தது.

பதிலுக்கு...சிபாரிசாய்
என்னிடம் கேட்கிறது
அவள் இதழில் சாகவேண்டும்
அனுமதி தருவாயா?’

ஸ்ட்ரா பெரியெல்லாம் எனக்கு
சக்களத்தனா?




               aaaaaaaa




சித்திரை நிலவும்

நித்திரை கலைக்கும்



கத்திரி வெயிலிலும்

கனவுகள் பிறக்கும்!



பகல் பத்தரை மணிக்கெல்லாம்
பனித்துளி தெறிக்கும்

உன் முத்திரைப் புன்னகை
முகத்திரை கிழிக்கும்.

கத்தினால் கூட 
காந்தர்வம் ஒலிக்கும்

பத்திரமாய் இரு என
பாற்கடல் தவிக்கும்!

நீ
மொத்தினால் கூட
மெத்தென்று இருக்கும்!

உனைப்
பெத்தவன் காலில் விழ
பெருங்கூட்டம் துடிக்கும்!

சத்தியம் சடுதியில்
சகலமும் துறக்கும்.

உன் 
முத்த வாய் தீண்டலில்
மோட்சமும் கிடைக்கும்

இனி
எத்தனை கவிதைகள்
எதுகையில் பிறக்கும்?




என்னை வேறொருவன்

காதலித்து..

அவனை

எனக்கும் 

பிடித்திருந்தால்

என்னடா

செய்வாய்
என்று 
கேட்டாள் 
என்னை, 
இத்தனை நாள் 
காதலித்தவள்..!

வருத்தத்துடன்
ஆரம்பித்தேன்.

உன்
விருப்பமே
என் 
விருப்பமடி..!

அவன்
கையில்
உன் கை கொடுத்து
சொல்வேன்..!

இன்னிலேருந்து
நீ
சாவுடா..!


(இது மட்டும் கொஞ்சம் வம்பாக எழுதியது)

aaaaaaaa


Comments

  1. என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

    ReplyDelete
  2. மிக்க நன்றி சார்!

    ReplyDelete
  3. சுரேகாஜி,

    //தேடிக் காதல் நிதம் தின்று...//

    காதல் பசியெடுத்த காசநோவா ரேன்ஞ்சில தலைப்பு இருக்கே ,அப்போ தினம் ஒரு காதலா :-))

    மகிழ்வான ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி வவ்வாலு..!! உங்களுக்கும் எனது புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்

      Delete

  4. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி மதுரைத் தமிழன்..

      Delete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !