திறமை இடைவெளி





இந்தியாவின் அடுத்த அரசு செய்யவேண்டியது , போர்க்கால அடிப்படைச் செயல்பாடுகள் பற்றி ‘நீயா நானா’வில் விவாதிக்கப்பட்டது.

நான் நீண்ட நாட்களாக, பல்வேறு இடங்களில் சொல்லிவருவதை இருவேறு கோணங்களில் Badri Seshadri அவர்களும், அழகேசன் அவர்களும் சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.

ஆம்..

இன்றைய இந்தியாவின் மிகப்பெரிய தேவை...

இந்திய இளைஞர்களின் வேலைத்திறன் மேம்பாட்டை அதிகப்படுத்துவதுதான்.

படித்தால் போதும்... எல்லா நிறுவனமும் எனக்கு வேலை தந்துவிட வேண்டும் என்ற நினைப்பிலிருந்து துவங்குகிறது இந்த Skill gap..

வேலை கிடைத்தால் போதும். பிறகு சிரமப்பட வேண்டியதில்லை ...எதுவும் கற்றுக்கொள்ளவேண்டியதில்லை என்ற நினைப்பில் நிலை கொள்கிறது இந்த Skill gap.

இரண்டு ஆண்டு ஓட்டினால் போதும். பிறகு அடுத்துவருபவர்களை அடிமைப்படுத்தியே ஓட்டிவிடலாம். நிறுவனத்தைக் குற்றம் சொல்லி சாதித்துவிடலாம் என்ற நினைப்பில் வேர் பிடிக்கிறது இந்த Skill gap.

கிடைத்த வேலையில் , ஓட்டிக்கொண்டே ,வேறு நிறுவனத்துக்கு வலைவீசலாம். இருக்கும் நிறுவனத்தில் என்னை, யாராவது ஏதாவது சொன்னால், தாங்கிக்கொள்ளவே முடியாது என்பதில் துளிர்விட்டு வளர்கிறது இந்த Skill gap.

எவ்வளவுதான் சம்பளம் கிடைத்தாலும், அதற்காக நான் எவ்வளவு உழைத்தேன் என்று நினைக்காமல், CONTRIBUTION என்ற வார்த்தையை ஏதோ நன்கொடையாக, நிறுவனங்களுக்கு - அரசு நிறுவனங்களும் சேர்த்துத்தான் - செய்வதாக நினைக்கும் நினைப்பில் பிரம்மாண்டமாகிறது இந்த SKILL GAP.

உண்மையில் நியாயமாக , திறமையாக வேலை பார்க்கும் 2 பேரின் தலையில் 18 பேர் சவாரி செய்துகொண்டு, கற்றுக்கொள்ளும் கதவை மூடிவிட்டு, குறைகளும், காரணங்களும் சொல்ல வாயை மட்டும் அகலமாக திறந்துவைப்பதில் அடுத்த விதையை உற்பத்தி செய்வதில் பெருகுகிறது இந்த skill gap.

இதற்கு சமீபத்திய முன் தலைமுறைக்குக் கிடைத்த 

போய் காய்கறி வாங்கிட்டு வா, 

ரேஷன் கடையில் வரிசையில் நில்லு..
 
இ.பி பில் கட்டிட்டு வா... 

உன் துணியை நீயே துவை!

பெரியப்பா வீட்டுக்குபோய் பத்திரிகை வச்சுட்டு வா, 

எங்களால முடியாது. நீ போய் காதுகுத்து அட்டெண்ட் பண்ணிட்டு மொய் வச்சுட்டு வா! ,

பாத்த சினிமாவின் கதையைச் சொல்லு!

மொளகா மல்லி அரச்சுட்டு வா!

லைப்ரரியில் போய் புக் மாத்திட்டு வா!

பால் கறந்து வை!

இன்னிக்கு தலைப்புச்செய்தி என்ன? பேப்பரில் என்ன படிச்ச?

கோதுமையைக் காய வை!

திருவிழாவுக்கு வா! கிராமத்துக்குப் போகலாம்.

லெட்டரை ஸ்டாம்ப் ஒட்டி போஸ்ட் பண்ணு!

அடி பைப்பில் தண்ணி பிடி!

விடுகதைக்கு பதில் சொல்லு!

ராத்திரி 8 மணிக்கு வந்துரு ...சேந்து சாப்பிடலாம்.

ரோட்டில் ஒழுங்கா, சிக்னலை மதிச்சு நடந்துக்க..

நீயே டிடி எடுத்து, அப்ளை பண்ணு.. அப்பா கையெழுத்து மட்டும் போடுறேன்.

போன்ற (SOCIAL EXPOSURE )சமூக வெளிப்பாடும் ....



சைக்கிள் பயணம்

பேருந்து கசகசப்பு

வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும்

ஒரு கேசட், 16 பாட்டு

கபடி , 

பல்லாங்குழி,
 
தாயக்கட்டை, 

செஸ்,

ஐஸ் பாய்

மேலும் பலப்பல

வாழ்வியல் சாதாரணங்கள் கிடைக்காமல் பார்த்துக்கொண்டதுதான் நம்மை அறியாமல் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் அடைந்த மிச்சம்.

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை..

இன்றைய பள்ளி இறுதி மாணவர்களிலிருந்து வேலைக்குச் சேரும் இளைஞர்கள் வரை இவற்றைச் சொல்லிக்கொடுத்தால் போதும். வேலைத்தகுதிக்குத் தேவையான,

Communication
Leadership
Team Skills
Creativity
Decision Making
Problem Solving
Time Management
Entrepreneurial Mind

ஆகியவை வந்துவிடும்..அப்புறம் கலக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஏனெனில் இந்திய மூளை என்றுமே மிகவும் ஆச்சர்யங்களும், ஆற்றலும் நிறைந்தது.

# வாங்க பாஸ் !! நம்ம சொல்லிக்குடுப்போம், நம்ம புள்ளைங்களுக்கு!

அடுத்து ஒன்று இருக்கிறது... விவசாயம்... அதை இன்னொரு நாள் பேசலாம். 

Comments

  1. முதலில் குழந்தைகளுக்கு...! அப்படிச் சொல்லுங்க...!

    ReplyDelete
  2. மிக மிக எளிமையாகச் சொல்லப்பட்ட
    மிக மிக அற்புதமான விஷயம்
    பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !