பதிவூடகம் ...கொஞ்சம் மேலேதான்.!




எல்லாவகை ஊடகங்களையும் நாம் கடந்துவந்து இங்கே இளைப்பாற தொடங்கியிருக்கிறோம்.எல்லாவற்றிலும் இல்லாத சிறப்பு இதில் இருப்பதை உணர்கிறேன்.

ஒரு படைப்பாளியின் மகிழ்ச்சி, அதை இரசித்தவர்கள், பார்த்தவர்களின் பாராட்டுதல்களில் உள்ளது. ஒரு முதிர்ச்சியடைந்த படைப்பாளிக்கு விமர்சனத்தையும் நல்லதாக எடுத்துக்கொள்ளமுடியும்.

ஒரு புத்தகத்தில் (வெகுஜன பத்திரிக்கையில்) எழுதினால். அது எழுதியது ஒரு காலமாக இருக்கும். அது பிரசுரிக்கப்படுவது மறு காலம். அதன் பிறகு படித்தவர்களில் 2% க்கும் குறைவானவர்கள், விமர்சனமோ பாராட்டோ, அந்த பத்திரிக்கைக்கு எழுதுவார்கள். அதற்கு இவரால் பதில் போட முடியுமா
என்பதும் சந்தேகமே!

அதேபோல், வானொலி - இதில் கேட்ட நிகழ்ச்சிகளுக்கான விமர்சனத்தையோ, பாராட்டையோ, உடனே அனுப்பினாலும் அவர்கள் எப்போது அதை படிப்பார்கள் என்று கூற முடியாது. அப்போது நாம் கேட்டால் நமக்கு கொஞ்சம் மகிழ்ச்சி..ஆனால் அதை வழங்கியவரிடமிருந்து பதில் கிடைப்பது மிகவும் அரிது ! (ஆனால் அந்த விமர்சனமும் நம்ம குரலில் , நாம் பேசுவதாக இருக்காது)

தொலைக்காட்சி - அதில் ஒரு நிகழ்ச்சி வழங்கினால். அதன் பின்னூட்டம் அவ்வளவு சீக்கிரம் வெளியில் வந்துவிடாது. அப்படியே வந்தாலும் , வார
இறுதி விடுமுறை முடித்து...ஊரைச்சுற்றிவிட்டு, அசந்து தூங்கப்போகும் நேரத்தில் அரைமணிநேரம் படிக்கப்ப்டும். வழங்கியவர்களின் பதில்? ம்ஹூம்...
மறந்துட வேண்டியதுதான்.! (நாமே கேமரா முன் அமர்ந்து நம் விமர்சனத்தை படிக்க முடியாது)

சினிமா - படைப்பை வெளியிட்டு விட்டு காத்திருப்பார். விமர்சிக்கலாம். இதற்காக ஒரு சினிமாவே எடுக்கமுடியாது. மற்ற ஊடகங்களில்தான் விமர்சிக்கமுடியும். அதற்கும் அவரும் வேறு ஊடகங்கள் மூலம் பொதுவாக பதில் சொல்லுவார். ஒரு தனி மனிதனின் கருத்தாக விமர்சனமும் சரி, பதிலும் சரி..கண்டிப்பாக ஒலிக்காது.. ( விமர்சனத்துக்காக மட்டும் சினிமா எடுத்தால் அது பிச்சிக்கிட்டு ஓடும்)

ஓவியனின் படைப்பை ஒரு கண்காட்சியில் வைத்தாலும் , நாம் செல்லும் நேரத்தில் அவர் சாப்பிடப்போயிருந்தால், நம் விமர்சனம் அவ்வளவுதான்.!
அதையும் மீறி சொல்லிவிட்டாலும் பதிலை காதில் வாங்கிக்கொண்டு வரவேண்டியதுதான். அவருக்கும் பாரட்டுக்களை ஓவியமாக்க முடியாது. விற்கத்தான் முடியும்.

அனேகமாக எல்லா ஊடகங்களுக்கும் இருந்து வரும் சிக்கல் இதுதான்...ஆனால் வலைப்பூ என்ற பெயரில் வந்து கலக்கிக்கொண்டிருக்கும் இந்த பதிவூடகத்துக்கு மட்டும்தான் அற்புதச்சிறப்புகள் அதிகமுண்டு. மற்ற அனைத்து ஊடகங்களும் கவனிக்கவும்  ஆரம்பித்துவிட்டன

நாம் எழுதலாம். சிந்தையில் சிந்தித்ததை நயம்பட, நம்மால் முடிந்தவரை அழகாக எழுதலாம்.
உடனுக்கு உடனே
விமர்சனம் கிடைக்கும்..
பாராட்டு கிடைக்கும்.
மாற்றுக்கோணம் கிடைக்கும்.
மீண்டும் நாம் பின்னூட்டத்தை மறுத்தோ,. நன்றி சொல்லியோ, வேறுகருத்துச்சொல்லியோ
அதே ஊடகத்தில் தொடரலாம்.
ஒரே விஷயத்தின் ஆழம் வரை செல்லலாம்.
நுனிப்புல்கள் தவிர்க்கலாம்.
படைப்பாற்றலை பெருக்கிக்கொள்ளலாம்.
உலகின் எந்தமூலைக்கும் படைப்பை அனுப்பலாம்.

அதைவிட மேலே..

நல்ல நண்பர்களை அடையலாம்.

ஆக.. ஒரு படைப்பாளி விரும்பும் எல்லா அம்சங்களும் ஒருங்கே இருக்கும் இந்த

பதிவூடகம் ...கொஞ்சம் மேலேதான்.!

டிஸ்கி: ஒரு பிரபல பதிவருடன் பேசிக்கொண்டிருந்தபோது கிடைச்ச முடிச்சு !

Comments

  1. எஸ். ஐ டோட்டல்லி அக்ரீ வித் யூ.

    ReplyDelete
  2. //
    எல்லாவகை ஊடகங்களையும் நாம் கடந்துவந்து இங்கே இளைப்பாற தொடங்கியிருக்கிறோம்
    //

    இப்பத்தைக்கு தமிழ்மணம் பாக்கலைன்னு நினைக்கிறேன்!!

    கலவர பூமில காத்து வாங்கறீங்க!!

    நடத்துங்க!

    ReplyDelete
  3. ம்.

    நல்லாதான் இருக்கு.

    ReplyDelete
  4. முழுமையான கருத்து சுதந்திரம் தான் இதன் சிறப்பு,

    ஆனா என்ன, ஒரு நாலு பதிவு எழுதிட்டா அப்புறம் நாம இதுக்கு அடிக்ட் ஆகிடறமோன்னு தோனுது,

    எழுதாம இருக்க முடியல, கை அரிக்குது

    நல்ல பதிவு

    ReplyDelete
  5. Sariyaka vimarisikka pattirukirathu..

    Karutthu suthanthiram iruppathaga padukirathu..

    Then…. As you are telling , suvathil aditha panthupola vimarsanangal live telecast pola udanukkudan.. varukirathu…
    எல்லாவற்றிலும் இல்லாத சிறப்பு இதில் இருப்பதை உணர்கிறேன்.

    ஒரு படைப்பாளியின் மகிழ்ச்சி, அதை இரசித்தவர்கள், பார்த்தவர்களின் பாராட்டுதல்களில் உள்ளது. ஒரு முதிர்ச்சியடைந்த படைப்பாளிக்கு விமர்சனத்தையும் நல்லதாக எடுத்துக்கொள்ளமுடியும்.

    Kandippaka…

    படைப்பாற்றலை பெருக்கிக்கொள்ளலாம்

    ungal alasal nantagavae irunthathu…

    ReplyDelete
  6. நீங்க சொல்வது முற்றிலும் உண்மை சுரேகா.

    நல்லாவே எழுதிருந்தாலும் சில சம்யம் பத்திரிகைக்கு அனுப்புவது ராக்கெட் மாதிரி திரும்பி விடும்.

    இதுவும் ஒரு ஊடகமாக அடையாளம் காணப்படுகிறது.

    ReplyDelete
  7. சுரேகா!

    இது, இது தான் பதிவு ;)! அப்ப முன்ன போட்டதெல்லாம் என்னாவாமின்னு கேக்கப்டாது... :-P.

    ரொம்பச் சரியாக சொன்னாய். இதில் கிடைக்கும் தட்டிக் கொடுத்தலும், குமட்டில் கிடைக்கும் குத்தல்களும் இன்னும் நம் கண்களை அகல விரிய வைக்கும் மாற்றுக் கல்விச் சாலை.

    என்னைப் பொருத்த மட்டில் இதனை விட சிறந்ததொரு மாற்று ஊடகம் வளர்ந்த, வளரும் நிலையில் இருப்பவர்களுக்கிடையில் கிடைக்கற்கரிய... இங்கே பங்களிப்பவனும், பயனாளியும் ஒருங்கே பயனடைகிறார்கள் - எ சிம்பயொடிக் மீடியம்.

    பி.கு: இதில் இன்னொரு சிறப்புமிருக்கிறது, எல்லோருக்கும் இந்த ஊடகத்தின் மூலமாக தான் நினைத்ததையெல்லாம் எழுத முடிவதால் என்னவாகுகிறதென்றால், உ.தா: 28வது வயதில் இருக்கும் ஒருவர் தனக்குக் கிடைத்த எக்ஸ்போசர்களைக் கொண்டு அரிதியிட்டு (அது குறுகிய எண்ணமே என்ற போதிலும்...) ஒரு கருத்தினை முன் வைக்கும் பொழுது, தன்வாழ்வின் விளிம்பு நிலையிலிருக்கும் நன்றாக வளர்ந்த வயதளவிலும் ஒருவர் இங்கே இருக்கும் பொழுதும் அதே தேக்கமுற்ற கருத்திற்கு தனது நிலையினை முன் வைக்கும் பொழுது அதனை தன் "வளர்நிலை அளவுகோலாக" கொண்டு மற்றவர் கருத்துகளையும் படிக்கும் பொழுது புதிய சிந்தனைக்கு அங்கே விதை தூவப்படுவதும் ஒரு சிறப்பே... மற்ற எந்த ஊடாகங்களாலும் முடியாத ஒன்று... இல்லையா?

    ReplyDelete
  8. துளசி கோபால் said...

    //எஸ். ஐ டோட்டல்லி அக்ரீ வித் யூ.//

    வாங்கம்மா..நன்றி!

    ReplyDelete
  9. மங்களூர் சிவா said...

    //இப்பத்தைக்கு தமிழ்மணம் பாக்கலைன்னு நினைக்கிறேன்!!

    கலவர பூமில காத்து வாங்கறீங்க!!

    நடத்துங்க!//

    பாக்குறோம் சாமீ ! ஆனா நம்மள்லாம் (உங்களையும் சேத்துதான்) அன்னப்பறவை ! .....உஊஊ

    ReplyDelete
  10. மங்களூர் சிவா said...

    //ம்.

    நல்லாதான் இருக்கு.//

    வாங்க..

    ம்..நன்றி! (ஹி ..ஹி)

    ReplyDelete
  11. வசந்தம் ரவி said...

    //முழுமையான கருத்து சுதந்திரம் தான் இதன் சிறப்பு,

    ஆனா என்ன, ஒரு நாலு பதிவு எழுதிட்டா அப்புறம் நாம இதுக்கு அடிக்ட் ஆகிடறமோன்னு தோனுது,

    எழுதாம இருக்க முடியல, கை அரிக்குது

    நல்ல பதிவு//

    வாங்க சார்..!

    ஆமா..அது உண்மைதான்..அந்த அடிக்ஷனும் நல்லாத்தானே இருக்கு.. நல்ல, நேர செலவு..(முதலீடுன்னு கூட சொல்லலாம்) வாசிக்கும் தன்மையை கூட்டியிருக்கு!

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி !

    ReplyDelete
  12. Anonymous said...

    //Sariyaka vimarisikka pattirukirathu..

    Karutthu suthanthiram iruppathaga padukirathu..

    Then…. As you are telling , suvathil aditha panthupola vimarsanangal live telecast pola udanukkudan.. varukirathu…//

    வாங்க விஜய பாஸ்கர் சார்.. தங்கள் வருகையும், பாராட்டும் அன்புடன் ஏற்கப்படுகிறது..

    நீங்க சொல்வது தான் நானும் உணர்ந்தேன்.

    ReplyDelete
  13. நீங்க சொல்றது ஒத்துக்கலாங்க. ஆனா என்ன ஒரு 300-500 பேர்தான் படிப்பாங்க(அதிக பட்சம்). அதைமட்டும் வெச்சுகிட்டு தமிழ்மக்களுக்கு சொல்லிட்டேன்னு நினைக்கிறதுதான் தப்பு.

    ReplyDelete
  14. நல்ல கருத்து. நானும் தங்களது கருத்துடன் ஒத்துப்போகிறேன்.
    //ஒரே விஷயத்தின் ஆழம் வரை செல்லலாம்.//

    ReplyDelete
  15. புதுகைத் தென்றல் said...

    //நீங்க சொல்வது முற்றிலும் உண்மை சுரேகா.

    நல்லாவே எழுதிருந்தாலும் சில சம்யம் பத்திரிகைக்கு அனுப்புவது ராக்கெட் மாதிரி திரும்பி விடும்.

    இதுவும் ஒரு ஊடகமாக அடையாளம் காணப்படுகிறது.//

    ஆமா. அதை அனுபவிச்சுக்கிட்டிருக்கும் சந்தோஷம்தான் இதை எழுத வச்சது.!

    ReplyDelete
  16. சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

    //ஆமா. நீங்க சொல்ரது சரி.//

    வாங்க..நன்றி சார்..!

    ReplyDelete
  17. Thekkikattan|தெகா said...

    //சுரேகா!

    இது, இது தான் பதிவு ;)! அப்ப முன்ன போட்டதெல்லாம் என்னாவாமின்னு கேக்கப்டாது... :-P.//

    நன்றி அண்ணாத்த..! வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி..!

    //என்னைப் பொருத்த மட்டில் இதனை விட சிறந்ததொரு மாற்று ஊடகம் வளர்ந்த, வளரும் நிலையில் இருப்பவர்களுக்கிடையில் கிடைக்கற்கரிய... இங்கே பங்களிப்பவனும், பயனாளியும் ஒருங்கே பயனடைகிறார்கள் - எ சிம்பயொடிக் மீடியம்.//

    ஆமாம் அண்ணா..! நீங்க சொல்லித்தானே இந்த எண்ணமே உதித்தது..

    என்னை பரிணமிக்கவோ...பரிமளிக்கவோ வைக்கும் இந்த ஊடகத்துக்கு ஒரு நிதர்சனம்! அவ்வளவுதான்.!

    //மற்றவர் கருத்துகளையும் படிக்கும் பொழுது புதிய சிந்தனைக்கு அங்கே விதை தூவப்படுவதும் ஒரு சிறப்பே... மற்ற எந்த ஊடாகங்களாலும் முடியாத ஒன்று... இல்லையா?//

    அதுதான் இந்த ஊடகத்தின் தனிச்சிறப்பாகிறது!

    ReplyDelete
  18. ILA(a)இளா said...

    //நீங்க சொல்றது ஒத்துக்கலாங்க. ஆனா என்ன ஒரு 300-500 பேர்தான் படிப்பாங்க(அதிக பட்சம்). அதைமட்டும் வெச்சுகிட்டு தமிழ்மக்களுக்கு சொல்லிட்டேன்னு நினைக்கிறதுதான் தப்பு.//

    வாங்க சார் ! நலமா?

    ஆமா..சரிதான்! ஆனா அவுங்களாவது படிக்கிறாங்களேன்னு சந்தோஷப்படும் அளவுக்கு ஆகும். ஏனெனில்..நூறு படைப்புகளில் ஒன்றுதான் பத்திரிகைக்கு போகும். லட்சத்தில் ஒன்றுதான் வானொலிக்கு..டிவிக்கு.சினிவாவுக்கு..கேட்கவே]
    வேண்டாம். அதுக்கப்புறம்தான் விமர்சனமே..! இன்னொன்று..இது அப்படியே வலையுலகில் கிடைக்கும்.அதைத்தான் சொன்னேன். எந்த படைப்பும். எந்த ஊடகம் மூலமும் எல்லோரையும் அடைந்துவிடாதுதான்.!

    ReplyDelete
  19. தமிழ் பிரியன் said...

    //நல்ல கருத்து. நானும் தங்களது கருத்துடன் ஒத்துப்போகிறேன்.//

    வாங்க தமிழ் பிரியன். முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

    ReplyDelete
  20. பதிவூடகம், நிச்சயமாக மேலேதான், மெத்தச் சரி! எத்தனை தமிழ் மிடையங்களுக்கு (இராம.கி அய்யா மீடியாவுக்குப் பரிந்துரைத்த வார்த்தை மிடையம்) உலகம் முழுவதும் நிருபர்களை வைத்துக்கொள்ள முடியும்? 0! வலைப்பதிவுகளால் மட்டுந்தான் உலகளாவிய அனுபவங்களை உடனுக்குடன் பெற முடியும். ஏற்கெனவே வலைப்பதிவுகளிலிருந்து பெரும் மிடையங்கள் கதைகளைப் பெறுவது வழமையாகிவிட்டது.

    ReplyDelete
  21. என்ன தான் இங்கே நீங்கள் திறமையான எழுத்தாளரக இருந்தாலும் பதிவுலகத்தை பொறுத்தவரை நீங்கள் மற்றவர்களுக்கு கருத்துரை எழுதினால் மட்டுமே அவர்கள் உங்கள் பதிவிற்கு வருவார்கள், கருத்துரை எழுதுவார்கள் பின்னர் விதிவிலக்காக பெண்களின் வலைப்பதிவுகள்.

    நிச்சியமாக இது ஒரு ஆரோக்கியமான பாதை இல்லை இந்த வலைப்பதிவு உலகத்தில் நடப்பதை பார்க்கதானே செய்கிறோம் இண்டிலியில் வரும் பிரபல பதிவுகளை நானும் கவணிப்பதுண்டு எந்தவிதத்திலும் யாருக்கும் பயன்படாத பதிவுகள் எல்லாம் பிரபலம் ஆகியிருக்கும் நல்ல பதிவுகள் எத்தனையோ புறக்கனிக்கபட்டிருக்கும் இது தான் நடக்கிறது இங்கே இதுவும் ஒரு அரசியல் இதை யாரும் மறுக்க முடியாது, எளிதில் மாற்றவும் முடியாது

    ReplyDelete
  22. இங்கு முழுக்க முழுக்க கொடுக்கல் வாங்கள் தான் விதிவிலக்காக சில வலைப்பதிவர்கள்ிங்கு நடப்பது ஒரு கூட்டு அரசியல் நீ என்னை பற்றி எழுது நான் உன்னை பற்றி எழுதுகிறேன் நீ எனக்கு ஓட்டுப்போடு நான் உனக்கு போடுகிறேன் இதை சில பதிவர்கள் வெளிப்படையாகவே பதிவுகளில் எழுதியிருக்கிறார்கள் நீ எனக்கு பாலோவர் ஆனால் உடனே நானும் பாலோவர்! இல்லையென்று மறுக்கமுடியுமா?

    ReplyDelete
  23. நான் எழுதிய கருத்துக்கள் உடன்பாடில்லாத பட்சத்தில் எந்தவித தயக்கமும் வேண்டாம் அழுத்தி விடுங்கள் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை


    வாழ்க வளமுடன்

    என்றும் அன்புடன்
    ஞானசேகர்

    ReplyDelete
  24. அது சரி யார் அந்த பிரபல பதிவர்

    ReplyDelete
  25. பதிவுலகத்திற்கு புதியவனான எனக்கு தங்களின் அறிமுகம் பதிவர் திருவிழா மூலம் தான் கிடைத்தது.தங்களின் நிகழ்ச்சி தொகுப்பு நன்றாக,ரசிக்கும் படியாக இருந்தது.
    நிகழிச்சிக்கு உதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
    என் வலைப்பூவில்:
    சாதனை பதிவர்களை,பதிவுலக சாதனையாளர்களை பற்றிய பதிவு:
    http://vijayandurai.blogspot.com/2012/08/blog-post_28.html

    ReplyDelete
  26. அன்பின் சுரேகா - சிந்தனை அருமை - பதிவுகளுக்கு தனி மரியாதை தான். நாம் நினைத்தால் உடனே போடலாம் - வானொலி தொலைக்காட்சி புத்தகங்கள் பத்திரிகைகள் என எதில் பங்கு பெற்றாலும் அவை வெளி வரும் காலம் நம் கையில் இல்லை. நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் சுரேகா - நட்புடன் சீனா

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !