கொள்(கை)ளைக் கோமான்கள்

வீட்டுக்குள் நுழைந்தபோது, தொலைக்காட்சியில் கலைஞர் அலைவரிசை ஓடிக்கொண்டிருந்தது. அது விளம்பர இடைவேளை...

ஒரு அறிவிப்பு பரபரப்பாக.....நமது கலைஞர் தொலைக்காட்சியில்..
செப்டம்பர் 3 விடுமுறையை முன்னிட்டு....
ப்ளா ப்ளா என்று பல்வேறு நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் பட்டியலிட்டார்கள்.

அது என்ன..செப்டம்பர் 3 விடுமுறைக்கு என்று ஒரு சிறப்புக்கொண்டாட்டம் என்று பார்த்தால்
அன்று விநாயகர் சதுர்த்தியாம்..! அடேயப்பா என்ன ஒரு கலை(ஞர்) சாமர்த்தியம்!
கடவுள் இல்லை எனும் இவர்களது கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டார்களாம்.ஆனால் அதே சமயம், சன் ட்டிவி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு என்று பகிரங்கமாக அறிவித்து நிகழ்ச்சி நடத்தி சம்பாதிப்பதை தாங்கவும் முடியாது. அதனால் அன்று வரும் வருமானத்தையும் விட்டுக்கொடுக்கமுடியாதாம்.

உண்மையில் கொள்கைவாதியாக இருந்தால், வினாயகர் சதுர்த்தி என்று ஒரு நாள் நடப்பதைப்பற்றியே அலட்டிக்கொள்ளாமல் எப்பவும்போல கேவலமான நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டுபோகவேண்டியதுதானே?

இல்லை..! எங்க கட்சிக்கு மட்டும்தான் கடவுள் இல்லை ! ஹி.ஹி.அது எங்க அரசியல் ஓட்டுப்பிச்சைக்காரத்தனம்...எங்க ட்டிவிக்கு எல்லா சாமியும்தான் முக்கியம்ன்னு தெளிவாக நம்மை குழப்பி வெளிப்படையாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு என்று சொல்லி நிகழ்ச்சிகளைப்போடவேண்டிய்துதானே !
எவ்வளவு அசிங்கத்தனமான வியாபார நோக்கம் !
இப்படித்தான் எல்லாவற்றிலும் சமரசம் செய்துகொண்டு -கொள்கைவாதிபோலும் பீற்றிக்கொண்டு - மனசாட்சியே இல்லாமல் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களது பொய், புரட்டுகளுக்கு சர்வசாதாரணமாக நாமும் பலியாவதுதான் கொடுமை!

"சமுதாயத்திற்கு முன் கொள்கைமுழக்கம்போல் கூவிவிட்டு, தன் சுயலாபத்துக்காக ,கொள்கைக்கு முரணாக நடப்பவர்களை செருப்பால் அடிக்கவேண்டும்" என்று பெரியார் தெளிவாகக்கூறி இருக்கிறார். ( தன் பெயர் சொல்லி டகால்ட்டி காட்டும் அடுத்த தலைவர்கள் இப்படியெல்லாம் செய்யமாட்டார்கள் என்று நம்ம்ம்ம்ம்பி ! )

இப்படிப்பட்ட கயவர்களை என்ன செய்வது?

அரசியலில் என்னவேண்டுமானாலும் செய்துவிட்டுப்போகட்டும்...
ஆனால் கொள்கை என்ற வகையில்... மருத்துவர் மாலடிமை மிகவும் உயர்ந்தவர்!
தன் கொள்கையின் அடிப்படையிலேயே ஒரு தொலைக்காட்சியை உருவாக்கி, அதற்கு டாக்டர் டிவி என்றோ, ராம் ட்டிவி என்றோ பெயர் வைக்காமல் மக்கள் ட்டிவி என்று ஒரு பொதுப்பெயரை வைத்து...தமிழர் கலாச்சாரத்துக்கான அத்தனை அடையாளங்களுடனும் , மனிதன்- அதுவும் தமிழன் பார்ப்பதுபோல் நிகழ்ச்சிகள் தருகிறார்கள்! கொண்ட கொள்கையில் மாறாமல், தாக்குப்பிடிக்கிறார்கள்

அவர்களைப்பார்த்தாவது கற்றுக்கொள்ளுங்கள் எங்கள் திராவிடர் முன்னேற்றத்துக்காகவே மானாட மயிலாட நடத்தும் மகான்களே!


டிஸ்கி: படிச்சு முடிச்சவுடனே தயாரா வச்சுருக்கிற பெயிண்ட் டப்பாவ எடுத்து சுரேகாவுக்கு இதாம்ப்பா நிறம்ன்னு எனக்கு ஒரு கலர் பூசிடாதீங்கப்பு ! மனசுல தோணினதை எழுதிப்புட்டேன். நியாயம் பேச கலரே தேவையில்லை! நல்லது நினைக்கும் மனசும்....எல்லாம் நல்லா இருக்கணும்னு பாக்குற கண்ணும் போதும்!

Comments

  1. அரசியலில் கொள்கையா நல்ல தமாசு!!

    ReplyDelete
  2. கலைஞர் டீவி என்பது என்பெயரில் ஆரம்பித்தது இல்லை கலைஞர்கள் என்றால் வேறு ஒரு அர்த்தமும் இருக்கு அந்த கலைஞர்களை மனதில் வைத்து ஆரம்பிக்கப்பட்டது என்று எப்போவோ எஸ்கேப் ஆயிட்டார் தலைவர்!

    ReplyDelete
  3. //அவர்களைப்பார்த்தாவது கற்றுக்கொள்ளுங்கள் எங்கள் திராவிடர் முன்னேற்றத்துக்காகவே மானாட மயிலாட நடத்தும் மகான்களே!//

    ஏதாவது செய்யனும் பாஸ்:)

    ReplyDelete
  4. //டிஸ்கி: படிச்சு முடிச்சவுடனே தயாரா வச்சுருக்கிற பெயிண்ட் டப்பாவ எடுத்து சுரேகாவுக்கு இதாம்ப்பா நிறம்ன்னு எனக்கு ஒரு கலர் பூசிடாதீங்கப்பு ! மனசுல தோணினதை எழுதிப்புட்டேன். நியாயம் பேச கலரே தேவையில்லை! நல்லது நினைக்கும் மனசும்....எல்லாம் நல்லா இருக்கணும்னு பாக்குற கண்ணும் போதும்!///


    இப்பிடியெல்லாம் கேள்வி கேட்டா இங்க யாருமே பதில் சொல்லமாட்டாங்க..... :)

    ReplyDelete
  5. மானாட மயிலாட நிகழ்ச்சியை கிண்டல் செய்ததற்கு கண்டனங்கள் :(

    அது ஒன்னுதான் அந்த சேனல்ல பாக்கிற நிகழ்ச்சியே!

    ReplyDelete
  6. /
    உண்மையில் கொள்கைவாதியாக இருந்தால், வினாயகர் சதுர்த்தி என்று ஒரு நாள் நடப்பதைப்பற்றியே அலட்டிக்கொள்ளாமல் எப்பவும்போல கேவலமான நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டுபோகவேண்டியதுதானே?
    /

    கருப்பு மஞ்சளானபோதே தெரியாதா கொள்கையின் அளவுகோல்களை என்னய்யா இப்ப வந்து புலம்புறீர்!?!?

    ReplyDelete
  7. /
    எங்க கட்சிக்கு மட்டும்தான் கடவுள் இல்லை ! ஹி.ஹி.அது எங்க அரசியல் ஓட்டுப்பிச்சைக்காரத்தனம்...எங்க ட்டிவிக்கு எல்லா சாமியும்தான் முக்கியம்
    /

    இதெல்லாம் understood இதெல்லாம் புரியாதவங்களை

    ஹைய்யோ ஹைய்யோ

    ReplyDelete
  8. /
    "சமுதாயத்திற்கு முன் கொள்கைமுழக்கம்போல் கூவிவிட்டு, தன் சுயலாபத்துக்காக ,கொள்கைக்கு முரணாக நடப்பவர்களை செருப்பால் அடிக்கவேண்டும்" என்று பெரியார் தெளிவாகக்கூறி இருக்கிறார்
    /

    :)))

    விடுங்க விடுங்க பொதுவாழ்க்கைல இதெல்லாம் ஜகஜமப்பா கண்டுக்காம போங்க மத்தவங்க எல்லாம் போகலை!?!?

    ReplyDelete
  9. /
    இப்படிப்பட்ட கயவர்களை என்ன செய்வது?
    /

    பேசாம ஸ்டார் மூவிஸ், ஹெச்பிஓன்னு நாம மாறிக்க வேண்டியதுதான்!

    ReplyDelete
  10. /
    மக்கள் ட்டிவி என்று ஒரு பொதுப்பெயரை வைத்து...தமிழர் கலாச்சாரத்துக்கான அத்தனை அடையாளங்களுடனும் , மனிதன்- அதுவும் தமிழன் பார்ப்பதுபோல் நிகழ்ச்சிகள் தருகிறார்கள்!
    /

    அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    நீங்க இந்த தொல்லைகாட்சி நிகழ்ச்சிகள் மட்டும்தான் பாக்குறீங்களா???

    உங்க மனதைரியத்தை நான் ரொம்ப ரொம்ப ரொம்பவே பாராட்டுறேன்!!

    ReplyDelete
  11. இப்பிடி ஒரு டிஸ்கி போட்டா இல்லைன்னு ஆகீருமா??

    ReplyDelete
  12. டிஸ்கி பாத்தா எதோ "எங்கப்பன் நாட் இன் த குதிரு" கணக்கால்ல இருக்கு!?!?

    என்ன மேட்டர்!?!?

    :))))))))))

    ReplyDelete
  13. நீங்கள் சொல்வதில் ஒரு தவறும் என் கண்ணில் படவில்லை.
    அலுத்துச் சலித்தப் போது பொதிகையும்,மக்கள் காட்சியுமே நன்றாக இருக்கும்.
    மற்றவர்கள் மேலும் பணம் தேடவே இது போல நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அதுவெ அவர்கள் கொள்கை.நல்ல பதிவு சுரேகா.

    ReplyDelete
  14. சபாஷ் சரியான பதிவு.. நல்லா சொல்லி இருக்கிங்க..
    //மக்கள் ட்டிவி என்று ஒரு பொதுப்பெயரை வைத்து//
    மன்னிக்கவும்.. அது மக்கள் ட்டிவி அல்ல.. மக்கள் தொலைகாட்சி..

    அரசியலில் சரியான பச்சோந்தியாக இருந்தாலும்( இப்போ யார்தான் அப்ப்டி இல்ல?) தொலைகாட்சி விஷயத்தில் சரியான கொள்கை வாதி தான். சினிமாவை அறவே புறக்கணித்துவிட்டு ஒரு தொலைகாட்சி நடத்துவது எவ்வளவு பெரிய சவால்?.. இந்த விஷயத்தில் மருத்துவரய்யாவுக்கு சல்யூட்...

    ... மிட் நைட் மசாலாக்கள் ஒழிந்துவிட்டதே என்று கவலையுடன் இருந்தவர்களுக்காக மானாட மயிலாட என்று மாலைநேர மசாலா தரும் கலைஞர் ட்டிவியில் கொள்கை பிடிப்பு எதிர்பார்பப்து, உங்கள் வயது முதிர்ச்சியை தான் காட்டுகிறது.. :P

    ReplyDelete
  15. http://mayavarathaan.blogspot.com/2008/08/472.html

    ReplyDelete
  16. சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  17. //mani said...

    அரசியலில் கொள்கையா நல்ல தமாசு!!//

    வாங்க மணி...நான் அரசியல்ல கேக்கலை..
    தொலைக்காட்சிலதான் கேக்குறேன்.!

    ஆனா இவுங்களுக்கு ஏது கொள்கைங்கிறீங்களா?

    கரெக்ட்தான்..! :)

    ReplyDelete
  18. குசும்பன் said...

    //கலைஞர் டீவி என்பது என்பெயரில் ஆரம்பித்தது இல்லை கலைஞர்கள் என்றால் வேறு ஒரு அர்த்தமும் இருக்கு அந்த கலைஞர்களை மனதில் வைத்து ஆரம்பிக்கப்பட்டது என்று எப்போவோ எஸ்கேப் ஆயிட்டார் தலைவர்!//

    வாங்கப்பு!
    ஆமாமாம். நம்பிட்டோமுல்ல!
    :)

    ReplyDelete
  19. குசும்பன் said...


    //ஏதாவது செய்யனும் பாஸ்:)//

    ஏன் இந்தக்கொலை வெறி?
    நீங்கபாட்டுக்கும் சந்தோஷமா அமீரகத்துல இருக்கீங்க!

    ReplyDelete
  20. //ஏதாவது செய்யனும் பாஸ்:)//

    ஏன் இந்தக்கொலை வெறி?
    நீங்கபாட்டுக்கும் சந்தோஷமா அமீரகத்துல இருக்கீங்க!

    //

    hahahahha
    :)

    ReplyDelete
  21. //இராம்/Raam said...//

    வாங்க வாங்க...இராம்.!

    எப்படி இருக்கீங்க!
    வருகைக்கு மிக்க நன்றிங்க!
    உங்களையெல்லாம் பாத்துத்தான் எழுத ஆரம்பிச்சேன். அடிக்கடி வந்து போங்க!

    //இப்பிடியெல்லாம் கேள்வி கேட்டா இங்க யாருமே பதில் சொல்லமாட்டாங்க..... :)//

    நாம்பாட்டுக்கும் எம்போக்குல பொலம்பினேங்க! அம்புட்டுதேன்!

    ReplyDelete
  22. //மங்களூர் சிவா said...

    மானாட மயிலாட நிகழ்ச்சியை கிண்டல் செய்ததற்கு கண்டனங்கள் :(

    அது ஒன்னுதான் அந்த சேனல்ல பாக்கிற நிகழ்ச்சியே!//

    அதான் இப்பல்லாம் வீக்கெண்ட் ஜொள்றதில்லையா?
    ஜரி..ஜரி..! :))

    ReplyDelete
  23. மங்களூர் சிவா said...

    //கருப்பு மஞ்சளானபோதே தெரியாதா கொள்கையின் அளவுகோல்களை என்னய்யா இப்ப வந்து புலம்புறீர்!?!?//

    ஏதாவது கொஞ்சமாவது கொள்கை இருக்குமாக்கும்னு ஒரு நப்பாசைதான் ஹி..ஹி..

    ReplyDelete
  24. //மங்களூர் சிவா said...


    இதெல்லாம் understood இதெல்லாம் புரியாதவங்களை

    ஹைய்யோ ஹைய்யோ//


    என்னப்பா செய்றது? இப்புடிப்பொலம்ப விட்டுட்டாங்களே!?

    ReplyDelete
  25. //அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    நீங்க இந்த தொல்லைகாட்சி நிகழ்ச்சிகள் மட்டும்தான் பாக்குறீங்களா???

    உங்க மனதைரியத்தை நான் ரொம்ப ரொம்ப ரொம்பவே பாராட்டுறேன்!!//

    எப்பவாவதுதான் ட்டிவி பாக்க நேரம் கிடைக்கும். அப்ப பாத்துக்கிறது!
    நீங்களும் கொஞ்சம் உக்காந்து பாருங்களேன். ஒரு சின்ன மாற்றம் நிகழும்.
    அப்பப்ப...ம்யூசிக் சேனல் பாத்துக்கலாம்.
    நகைச்சுவை நேரம் பாத்துக்கலாம்.

    இந்தப்பதிவைப்பொறுத்தவரை.

    கொண்ட கொள்கைக்கு முரணான கொள்ளைத்தனத்தைப்பத்திதான் பேசவந்தேன்.

    ReplyDelete
  26. //// மங்களூர் சிவா said...

    டிஸ்கி பாத்தா எதோ "எங்கப்பன் நாட் இன் த குதிரு" கணக்கால்ல இருக்கு!?!?

    என்ன மேட்டர்!?!?//

    அடப்பாவி..!
    இப்படி ஒரு பதிவப்போட்டு,

    இப்படி ஒரு டிஸ்கியும் போட்டுடுங்கன்னு ஐடியா குடுத்துட்டு இப்புடி ஜகா வாங்கினா என்ன அர்த்தம்?

    எப்புடி?

    ReplyDelete
  27. is a Television channel and must not be confused with the political party its promoters belong to , in that sense it makes prudent commerce.
    In Business , there is no such room...a teetotaller can run a liquor shop , a vegetarian can run a non veg hotel and so on.
    We act in so many roles and need not subscribe to the views of the movie or the director or even the character.As Goundamani said...idhu ellam sagajamappa.....

    ReplyDelete
  28. வல்லிசிம்ஹன் said...

    //நீங்கள் சொல்வதில் ஒரு தவறும் என் கண்ணில் படவில்லை.
    அலுத்துச் சலித்தப் போது பொதிகையும்,மக்கள் காட்சியுமே நன்றாக இருக்கும்.
    மற்றவர்கள் மேலும் பணம் தேடவே இது போல நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அதுவெ அவர்கள் கொள்கை.நல்ல பதிவு சுரேகா.//

    வாங்க வல்லிசிம்ஹன்.!
    நீங்க சொல்ற்து சரிதான்

    மிகவும் நன்றிங்க!

    ReplyDelete
  29. SanJai said...

    சபாஷ் சரியான பதிவு.. நல்லா சொல்லி இருக்கிங்க..

    வாங்க வாங்க...நன்றி சஞ்சய்!


    //மன்னிக்கவும்.. அது மக்கள் ட்டிவி அல்ல.. மக்கள் தொலைகாட்சி..//

    அட..ஆமாங்க..ஒரு flow ல தப்பா சொல்லிட்டேன்.

    //அரசியலில் சரியான பச்சோந்தியாக இருந்தாலும்( இப்போ யார்தான் அப்ப்டி இல்ல?) தொலைகாட்சி விஷயத்தில் சரியான கொள்கை வாதி தான். சினிமாவை அறவே புறக்கணித்துவிட்டு ஒரு தொலைகாட்சி நடத்துவது எவ்வளவு பெரிய சவால்?.. இந்த விஷயத்தில் மருத்துவரய்யாவுக்கு சல்யூட்...//

    நானும் உங்களோட சேந்து நின்னு சல்யூட் அடிச்சுக்குறேன்.

    //... மிட் நைட் மசாலாக்கள் ஒழிந்துவிட்டதே என்று கவலையுடன் இருந்தவர்களுக்காக மானாட மயிலாட என்று மாலைநேர மசாலா தரும் கலைஞர் ட்டிவியில் கொள்கை பிடிப்பு எதிர்பார்பப்து, உங்கள் வயது முதிர்ச்சியை தான் காட்டுகிறது.. :P//

    அடக்கெரகமே!
    வயது முதிர்ந்தவர்கள் விடுற ஜொள்ளுதாங்க தாங்க முடியலை!
    அதுனால....என்னை வயதாகிட்டதா சொல்லும் கருத்தை...அழுதுகொண்டே மறுக்கிறேன். :)

    ReplyDelete
  30. //மாயவரத்தான்.... said...

    http://mayavarathaan.blogspot.com/2008/08/472.html//

    படிச்சுப்பாத்தேங்க!
    ஆச்சர்யமா இருக்கு!

    என்ன ஒரு ஒற்றுமை நமக்குள்ள!

    great men think alike ஒ!
    :)

    ReplyDelete
  31. Mohan's Musings said...

    //is a Television channel and must not be confused with the political party its promoters belong to , in that sense it makes prudent commerce. //

    welcome sir..!

    yeah..i agree too..i am asking the same..why dont they tell BECAUSE OF VINAYAGAR CHADHURTHI' so and so programmes are coming...!


    //In Business , there is no such room...a teetotaller can run a liquor shop , a vegetarian can run a non veg hotel and so on.
    We act in so many roles and need not subscribe to the views of the movie or the director or even the character.As Goundamani said...idhu ellam sagajamappa.....//

    Yeah...i agree that too. A vegetarian can run non-veg hotel. but he must not say in his board..
    veg.chicken guruma!
    thats what i think!
    :))))

    ReplyDelete
  32. நான் ஓன்னும் சொல்ல முடியாது..ஏன்னு உங்களுக்கே தெரியும் :)

    ReplyDelete
  33. //புதுகை.எம்.எம்.அப்துல்லா said...

    நான் ஓன்னும் சொல்ல முடியாது..ஏன்னு உங்களுக்கே தெரியும் :)//

    வாங்க வாங்க!

    அதானே!

    இந்த நெலமைல..குசும்பன் ஏத்திவுடுறாருங்க!

    ReplyDelete
  34. //மானாட மயிலாட நிகழ்ச்சியை கிண்டல் செய்ததற்கு கண்டனங்கள் :(

    அது ஒன்னுதான் அந்த சேனல்ல பாக்கிற நிகழ்ச்சியே!

    //

    :):):)

    ReplyDelete
  35. அரசியலைவிட பொருளாதாரம் பெரியது

    ReplyDelete
  36. //டிஸ்கி: படிச்சு முடிச்சவுடனே தயாரா வச்சுருக்கிற பெயிண்ட் டப்பாவ எடுத்து சுரேகாவுக்கு இதாம்ப்பா நிறம்ன்னு எனக்கு ஒரு கலர் பூசிடாதீங்கப்பு ! மனசுல தோணினதை எழுதிப்புட்டேன்.//

    இப்படிச் சொல்லிட்டா நாங்க விட்டுருவோமா :-)).

    இப்படியெல்லாம் மக்கள் கொள்கைக்கும் நடைமுறைக்கும் தொடர்போட செஞ்சா நல்லாத்தான் இருக்கும்... "மோகன் ம்யூசிங்" வியாபாரத்தில எதெல்லாம் சகஜமின்னு சொல்லியிருக்கார், நோட் த பாயிண்ட் :-).

    ReplyDelete
  37. வாங்க rapp

    வந்து மனசார சிரிச்சுட்டுப்ப்போனதுக்கு நன்றிங்க !

    ReplyDelete
  38. //uma kumar said...

    அரசியலைவிட பொருளாதாரம் பெரியது//

    வாங்க வாங்க..!
    நல்லா இருக்கீங்களா?

    ஆமா..உண்மைதான்.!
    ஆனா..

    பொருளாதாரத்துக்காக அரசியல் பண்றதுல்ல ஜாஸ்தியாகிடுச்சு!

    ReplyDelete
  39. Thekkikattan|தெகா said...

    வாங்கண்ணா..! எப்டி இருக்கீங்க?

    //இப்படிச் சொல்லிட்டா நாங்க விட்டுருவோமா :-)).//

    ஆமாமா...விட்டுட்டாலும்..! :)

    //இப்படியெல்லாம் மக்கள் கொள்கைக்கும் நடைமுறைக்கும் தொடர்போட செஞ்சா நல்லாத்தான் இருக்கும்... "மோகன் ம்யூசிங்" வியாபாரத்தில எதெல்லாம் சகஜமின்னு சொல்லியிருக்கார், நோட் த பாயிண்ட் :-).//

    அதைச்சொல்லுங்க!

    அரசியலும் ஒரு வியாபாரம்தானே! அதை ஒழுங்கா செய்யச்சொல்லித்தானே நானும் சொல்றேன்.

    மோகன் சார் சொன்னதும் உண்மைதான்.!
    கடைசீல கவுண்டமணி வசனம் நியாயத்தை சொல்லுதே! :)

    ReplyDelete
  40. சரியான கருத்துக்கள் சுரேகா.. அதிலும் அந்த டிஸ்கி சூப்பர்.

    சுரேகா.. நேற்றிலிருந்து ஒரு சில பதிவர்களின் பக்கங்கள் திறக்க வெகு நேரமாகிறது. (உ‍.ம்) புதுகைத் தென்றல், உங்களுடையது. பிரச்சினை எனக்கு மட்டுமாக இருக்க வாய்ப்பில்லை என்பதால் கவனிக்கவும். வலதுபுறம் உள்ள ஏதேனும் ஒரு காட்ஜெட் பிரச்சினை செய்ய வாய்ப்புள்ளது.

    ReplyDelete
  41. <=
    veg.chicken guruma!
    ==>

    அட! இது நல்லா இருக்கே!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !