இதையும் விமர்சனம் பண்ணினா என்ன ?

சினிமாவைத்தான் விமர்சிக்கம்னு இல்ல ! மெகா சீரியலும் நம்ப வீட்டுக்குள்ளயே வந்து டிக்கட் வாங்கிக்காமலே டார்ச்சர் பண்ணுதுல்ல.! அதயும் விமர்சனம் பண்ணினா என்னன்னு..... இறங்கிட்டேன்.

சினிமாவில்.. சில சீன்கள் நடந்திட்டிருக்கும்போது எழுந்து போய் வந்தால் கதைத்திருப்பத்தை கவனிக்கமுடியாம போயிடும்.
ஆனா நெடுந்தொடர்களுக்கு அதிலிருந்தும் விலக்கு இருக்கு.! பலமாசம் பாக்காம இருந்தாலும் பளிச்சுன்னு விட்ட இடத்திலிருந்து கதை புரியும்.

சரி நம்ம விமர்சனத்துக்கு வருவோம்.

கோலங்கள் னு ஒரு தொடர் வருது.!

முதல்ல வேகமா நடந்தும் ஓடியும்..தேவயானி ஒரு பாட்டு பாடுவாங்க ! (அது விளம்பரதாரர்கள் நிலையப்பொறுத்து சுருக்கமாவும், சில நாள் முழுசாவும் இருக்கும்)

அப்புறம் கதை ...எதை?

அபின்னு ஒரு பொண்ணு (எப்பவுமே ஒரு பையோடயே அலையும்) வேலைக்கு போகுது..அதுக்கு ஒரு கல்யாணம் ஆகி புருசன் குடும்பத்தோட அநியாயத்தை பொறுத்துக்குது..! அவனும் டைவர்ஸ் பண்ணிடுறான்..! அப்புறம் வேலைபாக்குற இடத்தில் முதலாளி நிறுவனத்தை விற்றுவிட புது முதலாளியோட அராஜகம் பொறுக்காம பொங்கி எழுந்து..அழுதுக்கிட்டே வெளில வந்து, புதுசா கம்பெனி ஆரம்பிச்சு புதுமுதலாளி ஆதிக்கு போட்டியா நிக்கிது..அவனும் பலப்பல டார்ச்சர் கொடுத்துப்பாக்குறான். அபியைக்கொல்ல போடுற திட்டத்துல எல்லாம் பாவம்.. வேற ஒரு கேரக்டருக்கு ஆப்பு..! அவுங்க எல்லாத்துலயும் தப்பிச்சு தொல்காப்பியன்கிற நண்பரோட கோர்ட், ஜெயில், கேரளா, ஆஸ்பத்திரின்னு பலப்பல இடங்களில் போராடி ஆதிக்கு சவாலா விடுது..! இதெல்லாம் நடக்கிறபோது இடையில் நமக்கு ஒரு அதிர்ச்சி.....! ஆதியும் , அபியும் அக்கா தம்பி..! இரண்டு அம்மா..ஒரே அப்பா. அதுக்கும்மேல பலப்பல கிளைக்கதைகளோட தொடர் போயிட்டிருக்கு!

இதில் அபி, ஆதி, ஆர்த்தி, அஞ்சலி, தொல்காப்பியன், ஈஸ்வரன், சங்கரபாண்டியன், கற்பகம் , உஷா, பாஸ்கர், தோழர், மனோ, அனு, சித்தப்பா, ராஜேஷ், வித்யா மற்றும் பலப்பல பாத்திரங்கள் (கல்யாணச் சீர் மாதிரி) நடந்திருக்கிறார்கள். மேலும் தில்லா, சல்பேட்டா சரோஜா, சாந்தின்னு சில பாத்திரங்கள் கதை முடிஞ்சு போச்சு!

அபி - தேவயானி, இயக்குநர் திருச்செல்வம் - தொல்காப்பியன் (மெட்டி ஒலி தொடரில் சந்தோஷ் என்ற பெயரில் நன்றாக நடித்தவர்)
தயாரிப்பு - விமர்சனங்களுக்கு பெயர்போன விகடனின் ஒளித்திரை.

முதலில் இந்தத்தொடரைப்பொறுத்தவரை...


நல்லவர்கள் சிரமப்பட்டுக்கொண்டே இருப்பார்கள், கெட்டவர்கள் நன்றாக இருப்பார்கள் என்ற இந்தக்காலத்துக்கு(? )பொருத்தமான கதை.

விவாகரத்து பண்ணின புருஷனை இவுங்க நம்பி வேலைக்கு சேத்துக்குவாங்களாம். அவனும் மறுபடியும் தப்புதான் பண்ணுவானாம்.

- அவன் மோசம்னு தெரிஞ்சுதானே விவாகரத்தே பண்ணுனீங்க?அப்புறம் ஏன் அவனை சேத்துக்கணும்? சரி சேத்துக்கிட்ட.. அவன் ஏன் அப்படியே துரோகம் பண்றவனாவே காட்டணும். ? அதாவது.

நீதி நம்பர் 1 : கெட்டவனுக்கு வாய்ப்பு கொடுத்தாலும் திருந்தமாட்டான் . நல்லவன் இளிச்சவாயன்.!

சல்பேட்டா சரோஜான்னு ஒரு வில்லி -தன் தம்பிகள் எதிர்காலத்துக்காக - திருந்துவாளாம். அவளை வில்லனின் மிரட்டலால் தம்பிகளே கொன்னுடுவாங்களாம்.!

ஒருத்தன் திருந்தினா அவன் மூலமா எந்த மாதிரி நல்லது நடந்தாலும் சகிக்கக்கூடாதா? கோர்ட்ல வச்சு சுடறது எப்படின்னு பாடம்வேற எடுக்கணுமா? (ஏற்கனவே நடந்துக்கிட்டுதானே இருக்கு)

நீதி நம்பர் 2 : கெட்டவன் திருந்தினாலும் உயிரோடு இருக்கமுடியாது.! சொந்த தம்பிகள்கூட கொல்வார்கள் !


தொல்காப்பியனை , கங்கான்னு ஒரு பொண்ணு காதலிக்கும். அவரும் அப்படியே! ஆனா அந்தப்பொண்ணு , அவர் நிறுவனத்தை அழிக்கறதுக்காக என்னவேணும்னாலும் செய்யும். நான் வேணும்னா உன் நட்பை விட்டுட்டு வான்னு காரணமே இல்லாம மிரட்டும்.

காதலிச்சாலும் , சொந்த விருப்பு சரி...! வெறுப்புக்காக என்னவேணும்னாலும் செய்யலாமா.? காதலி தன் தலைல கல்லையே தூக்கிப்போட்டாலும் நிறுவனத்துக்கு பங்கம் வந்தாலும், அவள் காதலில் உண்மை இல்லைன்னு தெரிஞ்சும் அவளை காப்பாத்த முயற்சி செய்யிறவனை....என்ன சொல்றது?


நீதி நம்பர் 3 : நல்லவன்னா காதலி என்ன செஞ்சாலும் பொறுத்துக்கிட்டு இருக்கணும். நல்ல காதலி , காதலனோட நண்பர்களை அழிக்கணும்னு நினைப்பாள்.


ஆதி சொந்த அப்பாவையே கடத்தியாவது சொத்தை எழுதி வாங்குவாராம். ஆனா குடும்பத்துல ரொம்ப பாசமா இருப்பாராம். அவர் கத்திப்பேசியே காரியம் சாதிப்பாராம். எப்பப்பாத்தாலும் அடுத்தவங்களை அழிக்க நினைச்சுக்கிட்டே இருப்பாராம்.

வில்லன்னா எந்த கடைசி வரைக்கும் போவான்னு காட்டிக்காட்டித்தானேப்பா இப்புடி இருக்கோம். அதுவும் அவன் கத்துற கத்தும் அவனது பாத்திரத்தை சித்தரிக்கும் விதமும்... அய்யோ!

நீதி நம்பர் 4: கெட்டவன், கெட்டது செய்யுறதை முழுநேரத்தொழிலாவும் , பகுதி நேரத்தொழிலா கட்டுமானப்பணியும் செய்வான்.

தில்லான்னு ஒரு போலீஸ் அதிகாரி. வில்லனுக்கு அரசாங்க அடியாள்! இவர்தான் அவர் சம்பந்தப்பட்ட எல்லா(!) வழக்குக்கும் போலீஸ் அதிகாரி.! நல்லவுங்க எல்லாரையும் டார்ச்சர் செய்யும் பொறுப்பு இவருக்கு! சட்டத்தின் இண்டு இடுக்கெல்லாம் போய் அபியை மூலை (corner) பண்ணுவாரு..! நல்லவேளை...(பாருங்க) இன்னொரு நல்லவன் மூலமா இறந்து போயிடுறாரு.!

ஒரு போலீஸ்காரனுக்கு வேற வேலையே கிடையாதா!? காசு வாங்கிட்டாங்கறதுக்காக என்ன வேணும்னாலும் செய்யலாமா? அதெப்படி அவ்வளவு பெரிய சென்னைல கெட்டவனுக்கும் நல்லவனுக்கும் நடக்குற எல்லா பிரச்னைகளும் இவர் ஸ்டேஷன் லிமிட்லயே வருது..?

நீதி நம்பர் 5 : கெட்டவனுக்கு போலீஸ் பக்கபலமா இருக்கும். போலீஸ் முடிவுக்கு வந்துட்டா உலகத்துல எந்த மூலைல நல்லவன் இருந்தாலும்....செத்தான்.!


அய்யய்யோ இதுக்கு மேல என்னால சொல்ல முடியல..
இயக்குநரின் மனநிலையை படைப்புகள் பிரதிபலிக்கும்னு சொல்லுவாங்க..!

இதுதான் அந்த இயக்குநரின் மனநிலையா.. ? இல்லை கதைநிலையா..? யாராவது எடுத்துச்சொன்னா மாத்திக்குங்க தலைவா.!

வீட்டுல , புள்ளைங்களெல்லாம் பாக்குது! கெட்டவனா இருக்குறதுதான் சுலபம், ரொம்ப நல்லதுன்னு மனசுல ஏத்தி அடுத்த சமுதாயத்த மண்ணா ஆக்கிறாதீங்க..! அதெப்படி டிவி பாத்து மாறுவாங்கன்னு கேக்குறீங்களா ?இப்பதான் பவர் ரேஞ்சரா சுத்துராங்களே.!

நல்லவனா இருக்குறதோட பயன்களை காட்டலைன்னாகூட பரவாயில்லை. அதன் கொடுமைகளை அதிகமாகாட்டி நல்லவனா வாழுற மனுசங்க மனசுல கும்மி அடிச்சுட்டு போயிராதீங்க !

Comments

  1. இதெல்லாமாய்யா பாக்குறீங்க!!

    ReplyDelete
  2. நல்ல ஸைக்கியாட்ரிஸ்ட் அட்ரெஸ் வேனுமா.. :-))

    ReplyDelete
  3. இதெல்லாம் ரொம்ப ஓவரு, சீரியல திறனாய்வு பண்ற அளவுக்கு ஒண்ணூமேல்ல அதுல.

    ReplyDelete
  4. சுரேகா இதுக்குத்தான் ரொம்ப சீரியல் பாக்காதீங்கனு சொல்றது. சினிமா 3 மணிநேரக் கொடுமை, அதுக்கு விமர்சனம் எழுதலாம். டீவீ சீரியலுக்கு எல்லாம் விமர்சனம் எழுதினா "எழுதிருக்கீங்க! எழுதிகிட்டு இருப்பீங்க! இன்னும் எழுதுவீங்க!" தேவையா? யோசிச்சு செய்யுங்க. (விமர்சன எழுத சீரியல் பார்க்க ஆரம்பிச்சு சீரியல் பைத்தியம் ஆகாமல் இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்)

    ReplyDelete
  5. Manasula Uruthura Oru Seidhiya
    Vimarsanam Seiyura Miga Sari Sureyga!

    Mananalatha Baadhikkura Endha Visayathaiyum Vimarsanam Seiyalaam!

    Matravanga Solra Maadhiri Mananalamaruthuvara Theda Vendiyadhu Illa!

    Varummun Kaapadhudhaney Nalladhu!

    Niraiya Eludhu Oodagangal Valiyavum Niraiya Kodumaigal Nadakkudhu!

    Nandri
    Manidhan

    ReplyDelete
  6. மங்களூர் சிவா said...

    //இதெல்லாமாய்யா பாக்குறீங்க!!//

    முழுசா பாக்கணும்னே அவசியம் இல்ல தலைவா! 4 வாரத்துக்கு ஒரு நாளாவது கண்ணுல பட்டுருது.! மேலும், வீட்டில் சாப்பிடும் நேரத்துலதானே இந்தக்கொடுமை நடக்குது! இதுக்கும் மேல இந்தப்பதிவுக்கு ஒரு காரணம் இருக்கு!

    அது... ஒரு பதிவாக எதிர்பாருங்கள்!

    ReplyDelete
  7. மங்கை said...

    //நல்ல ஸைக்கியாட்ரிஸ்ட் அட்ரெஸ் வேனுமா.. :-))//

    ஆமாங்க ! மொத்தமா எங்க தமிழக..ம்ஹூம்..தென்னிந்திய..அது ஏன்..இந்தியப்பெண்களுக்கே வேணும்ங்க!

    குறிப்பா ஒரு Megaserialogist ஆ பாத்து முகவரி கொடுங்க!

    ReplyDelete
  8. தம்பி said...

    //இதெல்லாம் ரொம்ப ஓவரு, சீரியல திறனாய்வு பண்ற அளவுக்கு ஒண்ணூமேல்ல அதுல.//

    அடடே.. இது திறனாய்வு இல்லங்க!

    என் சமூகத்தை இப்படி பிரதிபலிக்கிறாங்களேன்னு எரிச்சல்!

    மேலும்..இந்த ஒண்ணுமில்லாததான் பல வூட்டு பெண்கள் யோசிக்காம பாக்குறாங்க!

    ReplyDelete
  9. அடடா......வாழ்க்கையில் பல 'நல்லவற்றை' மிஸ் பண்ணிக்கிட்டு இருக்கேனோ?

    எனக்குத் தெரிஞ்ச ஒரே சீரியல்.
    ப்ரேக் ஃபாஸ்ட் சீரியல்தாங்க :-)))))

    ReplyDelete
  10. ramesh said...

    //Manasula Uruthura Oru Seidhiya
    Vimarsanam Seiyura Miga Sari Sureyga///

    நன்றிங்க!

    //Niraiya Eludhu Oodagangal Valiyavum Niraiya Kodumaigal Nadakkudhu!//

    ஆமாங்க..இவங்க தொல்லை தாங்க முடியல..கையில இருப்பது எந்த ஊடகம்..? இதுக்கு என்னன்ன கடமைகள் இருக்குன்னு தெரியாத கூட்டம்தானே செயல்படுது..!

    ReplyDelete
  11. //மொத்தமா எங்க தமிழக..ம்ஹூம்..தென்னிந்திய..!///

    என்னது உங்க தமிழகமா... அப்ப நாங்க எல்லாம்??????????????????????????
    அடப்பாவமேஎ ஒரு 3 வருஷம் தமிழகத்துல இல்லை, அதுக்குள்ள ஒதுக்கிட்டீங்களே

    ReplyDelete
  12. மங்கை said...

    //என்னது உங்க தமிழகமா... அப்ப நாங்க எல்லாம்??????????????????????????
    அடப்பாவமேஎ ஒரு 3 வருஷம் தமிழகத்துல இல்லை, அதுக்குள்ள ஒதுக்கிட்டீங்களே//

    எங்கன்னு ஒரு flow வில் , பன்மை சேர்க்கைக்காக சொன்னதுங்க..! நீங்களும் இருக்கீங்க, கவலையேபடாதீங்க!

    ReplyDelete
  13. புதுகைத் தென்றல் said...

    //சுரேகா இதுக்குத்தான் ரொம்ப சீரியல் பாக்காதீங்கனு சொல்றது.//

    அய்யோ..அய்யோ..நமக்கு இருக்குற நேரத்துக்கு இத வேற பாக்கணுமா?
    மாசத்துல ஒரு நாள் கண்ணுல பட்டா போதாதா? (அதுவும் ரிமோட் நம்ம ஆதிக்கத்தில் இல்லாதப்ப)

    //சினிமா 3 மணிநேரக் கொடுமை, அதுக்கு விமர்சனம் எழுதலாம். டீவீ சீரியலுக்கு எல்லாம் விமர்சனம் எழுதினா "எழுதிருக்கீங்க! எழுதிகிட்டு இருப்பீங்க! இன்னும் எழுதுவீங்க!" தேவையா? யோசிச்சு செய்யுங்க. //

    நீங்களே சொல்றீங்க!... 3மணி நேரக்கொடுமையையே விமர்சிக்கலாம்னா, 300 மணிநேரக்கொடுமையை கடுமையா விமர்சிக்கணும். அதுவும் அவுங்க பொறுப்பே இல்லாம வீட்டுக்குள்ள வந்து கூத்தடிச்சா?...கொதிக்குதுங்க!

    (விமர்சன எழுத சீரியல் பார்க்க ஆரம்பிச்சு சீரியல் பைத்தியம் ஆகாமல் இருக்க ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்)

    ஆமா..அதுவேற இருக்கு ! :-)))

    ReplyDelete
  14. துளசி கோபால் said...

    //அடடா......வாழ்க்கையில் பல 'நல்லவற்றை' மிஸ் பண்ணிக்கிட்டு இருக்கேனோ?//

    :-) கதை ரொம்ப பிடிச்சுப்போச்சோ?...நல்லவேளை பாக்காம தப்பிச்சீங்க! இல்லன்னா இரத்த அழுத்தம் எகிறிடும்.

    //எனக்குத் தெரிஞ்ச ஒரே சீரியல்.
    ப்ரேக் ஃபாஸ்ட் சீரியல்தாங்க :-)))))//

    :-)

    ReplyDelete
  15. I'm worried I've read the first 6 para...

    Blogla Comedy venumna seiyalam
    ana kolai ellam seiyakoodadhu....

    ReplyDelete
  16. சீரியல் எல்லாம் பாக்குறதா - அதுக்கு விமர்சனம் வேறயா ?? ம்ம்ம்ம் -

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !