நன்றி நவிலல்!

இந்த வாரம் முழுமையும்
எது எழுதினாலும் ரசித்து
குறைகளோடு ஏற்று,
வந்திருந்து வாழ்த்தி,
அன்புகாட்டி அசத்தி,
என்னுள்ளம் கொள்ளை கொண்ட
பதிவுலக நண்பர்களுக்கு
பணிவான நன்றிகள்!

திடீரென்று இன்பம் தந்து
திகட்டத்திகட்ட வாய்ப்பு தந்த
தமிழ்மண நிர்வாகத்திற்கு
தலைவணங்கி நன்றிகள்!

இனியென் எழுத்தில்
ஏதேனும் மாற்றத்தை
இயன்றவரை கொண்டுவந்து
எடுத்திருக்கும் நற்பெயரை
எப்போதும் தக்கவைப்பேன்.!

வாசிப்பில் வளர்ந்தாலும்
வாசிக்கும்படி வளர்வது
பதிவுலகம் எனக்குத்தந்த
பரிசாக எண்ணுகிறேன்!

சென்ற ஏழுநாட்களும்
எனக்கு வாரமல்ல!
வரம்!

Comments

  1. வாழ்த்துக்கள் சுரேகா. நட்சத்திர வாரத்தின் அனைத்து பதிவுகளும் அருமை. தங்களுக்கு தனி மடலிட்டிடுக்கிறேன். பார்க்கவும்.

    ReplyDelete
  2. அற்புதமான பதிவுகள்.

    வாழ்க!
    நா. கணேசன்

    ReplyDelete
  3. அன்பின் சுரேகா

    நல்வாழ்த்துகள் - வாரம் அல்ல வரம்

    நன்று நன்று

    ReplyDelete
  4. மிக்க நன்றி பழமைபேசி!

    ReplyDelete
  5. மிக்க நன்றி அமரபாரதி சார்!

    தனிமடல் கண்டேன். மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete
  6. மிக்க நன்றி நா.கணேசன்!

    ReplyDelete
  7. வாங்க சீனா சார்!

    உங்கள் அன்புக்கும், வாழ்த்துக்கும் என்றென்றும் நன்றிகள்!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  9. மிக்க நன்றி கேபிள் ஜி!

    ReplyDelete
  10. தம்பீ, அருமையாக சென்றது வாரம். நன்றி!

    ReplyDelete
  11. வாரமல்ல, வரம்..

    ஸப்பா.. எப்படிங்க???????????

    ReplyDelete
  12. நிஜம்மாவே சொல்லணும்னா நீங்க உங்களுக்கு கொடுக்கப்பட்ட அவகாசத்தை சரியா உபயோகப்படுத்தி நிறைவான பதிவுகளை கொடுத்திருக்கீங்க.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. வாங்க தெகா அண்ணா! நீங்க வராம வாரம் முடியுமா? உங்கள் அன்புக்கு நன்றி!

    ReplyDelete
  14. வாங்க கார்க்கி!

    உங்களை விடவா?

    :))

    ReplyDelete
  15. மிக்க நன்றி புதுகைத்தென்றல்..

    என்ன ஆச்சு.? பேரை மாத்திக்கிட்டீங்களா? (இயற்பெயருக்கு)

    ReplyDelete
  16. சென்ற ஏழுநாட்களும்
    எனக்கு வாரமல்ல!
    வரம்! //

    :)

    ReplyDelete
  17. அடடா.. சீக்கிரம் முடிஞ்சிடுச்சே.. ;)

    ReplyDelete
  18. நன்றிக்கு நன்றி...டிக்கெட் இல்லாமயே நிறைய ஊர்களை சுத்திக்காட்டினீங்களே! :-)

    ReplyDelete
  19. வாங்க விக்னேஷ்வரி!

    என்னா ஒரு சிரிப்பு ! :)

    ReplyDelete
  20. வாங்க அன்புடன் மணிகண்டன்..

    இது ஆதங்கமா? ஆத்திரமா? :))

    ReplyDelete
  21. வாங்க சந்தனமுல்லை..!

    நன்றிக்கு நன்றிக்கு நன்றி! :)
    எப்புடி!?

    நாங்க பப்புக்கிட்ட படிச்ச ஆளுங்க! :)

    ReplyDelete
  22. Hi Sureka,

    Why no new posts from you... are you okay.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !