ஊடலே இதற்கும் காரணி...!

இந்த கவிதை (மாதிரி).... பதிவா போட்டபிறகுதான்..

என் நண்பன் ஒருத்தன்
அழைப்பு நிலையத்தில் வேலை
பார்ப்பவன் சந்திச்சு பேசினான்.

அவனிடம் பேச்சுவாக்கில் இதுபத்தி சொல்ல.

அதையேன் கேக்குற?

அப்படி போனில் சந்தேகம் கேட்டு, எனக்கு மூட் சரியில்லாததால சண்டையாகி , அப்புறம் மெதுவா புரிஞ்சுக்கிட்டு ,காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டவதான் என் மனைவின்னான்.

அப்படிப்போடு..! ன்னேன்.

அதுமட்டும் இல்லடா..! அவளும் ஒரு அழைப்பு மையத்தில் வேலைக்கு சேர..எனக்கு இரவு வேலை..அவளுக்கு பகலில்.!
ஆக வீட்டு வேலையெல்லாம் நான் செய்யவேண்டியிருந்தது..(இதுமட்டும் காரணமில்ல...! ஆனா வெளிப்படையா சொல்லுவாங்களா?)

அன்னிக்கு ஒரு நாள் அவ கிளம்பிக்கிட்டிருக்கும்போது வண்டி சாவியப்பாத்தீங்களா ன்னு என்னப்பாத்து கேக்க , ஏன் நான் உனக்கு வேலையாளான்னு நான் அலுப்பாக பேச.. அது மெதுவா பூதாகரமாகி சண்டையா வெடிக்க, உனக்காகத்தானே..உன் சுமை குறைக்கத்தானே வேலைக்கு போய் கண்டவன்கிட்ட திட்டுவாங்குறேன். இனிமே வீட்ட பாத்துக்கறேன். வேலைக்கு போகலன்னு திடீர்ன்னு எகிறி சத்தியாக்கிரகம் பண்ணிட்டு ரூமுக்குள்ள போயிட்டா..

ஐய்யய்யோ.. அப்புறம்..?

அன்னிக்கு அவளை சமாதானப்படுத்தப்போனப்பதான்...

சொல்லு... போனப்பதான்..

நம்ம ....மனோஜ்.....ஹி ஹி...(அவன் மகன் பேரு)

அடங்கொக்கமக்கா..! இதுல இவ்வளவு இருக்கா..?

Comments

  1. தெய்வீகச்சிரிப்பா இருக்கு!

    :-)

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !