முதல் நாள்!



காலப்பெட்டியின்
ஒரு அடுக்கை
திரும்பிப்பார்க்கவும்
அடுத்த அடுக்குக்குள்
நுழைந்து கொண்டு
ஏதாவதுகளை
அடைப்பதற்கும்
எல்லோருக்கும்
ஒரு நாள் தேவைப்படுகிறது!

சென்ற ஆண்டின்
தவறுகளுக்கும்
வாழ்நாள்
தவறுகளுக்கும்
மூடுவிழா நடத்த
எண்ணி
முழுமூச்சாய்
முடிவெடுக்க
எல்லோருக்கும்
ஒரு நாள் தேவைப்படுகிறது.

இனிவரப்போகும்
வாழ்க்கையின்
வரையறைகளை
நோக்கத்தோடு
ஏற்றுக்கொள்ளவும்
நோக்கத்தை
மாற்றிக்கொள்ளவும்
எல்லோருக்கும்
ஒரு நாள் தேவைப்படுகிறது.


நடு இரவை
நாளின் முதலாய்
நிறைய நாட்கள்
பார்த்தாலும்
உள்ளம் கவர்ந்தோரின்
பிறந்தநாள் தவிர
கொண்டாட்டம்
நிறைந்த இரவாக்க
எல்லோருக்கும்
ஒரு நாள் தேவைப்படுகிறது.


அந்த நாள்
இந்த நாளாய்
இந்த நாள்
நம் சொந்த நாளாய்
அமைந்திருத்தல்
அன்பு காட்டவே!

அன்புகாட்டிய
அனைவருக்கும்
நன்றியால்
அன்பு சொல்லி..

அழகான
ஆண்டு ஒன்று
நம் மடியில்
தவழ்கிறது.
அன்புகொண்டு
ஆராதிப்போம்
அத்தனையும்
வெற்றியாக!




Comments

  1. நன்றி இயற்கை...

    உங்களுக்கும் என் இனிய 2010 வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

இறைவி - எண்ணங்கள் எனது !

சென்னைப் பிழை!